Connect with us

CINEMA

முடியெல்லாம் நரைத்து போய், வயதான தோற்றத்திற்கு மாறிய ‘தலைநகரம்’ பட நடிகை… லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்… 

2006ல்  இயக்குனர் சுந்தர் சி நடிகராக களமிறங்கிய சூப்பர் ஹிட் திரைப்படம் தலைநகரம். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக களமிறங்கியவர் தான்  நடிகை ஜோதிர்மையி. கேரளாவில் பிறந்த இவர், நடிக்க வருவதற்கு முன்பு தொகுப்பாளினியாக பணியாற்றியவர்.  ‘பைலோட்ஸ்’ என்ற படத்தின் மூலம் முதன்முதலில் மலையாள திரையுலகில் கால்பதித்தார்.

   

இதைதொடர்ந்து பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்த இவர், தமிழில் ‘தலைநகரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.  இப்படத்திற்கு பின்னர் விஜயகாந்த் நடித்த சபரி,நான் அவன் இல்லை,வெடிகுண்டு முருகேசன் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் தமிழ் ரசிகர்களிடம் சரியான வரவேற்பு கிடைக்காததால் திரும்பவும் தனது சொந்த மண்னான கேரளாவிற்கு சென்று அங்கே ஒரு சில ஆண்டுகள் படங்களில் நடித்தார்.

2004 ல் நிஷாந் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு சில ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இவர்கள்,   இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டனர்.  பின்னர் 2015ல் அமல் நீரத் என்ற மலையாள திரைப்பட இயக்குனரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் தற்போது மலையாளத்தில் மட்டும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நடிகை ஜோதிர்மயி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். ‘முடி வெள்ளையாகி இப்படி மாறிட்டாரே’ என லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Continue Reading

More in CINEMA

To Top