Connect with us

CINEMA

அட கொடுமையே… பிக் பாஸ் வீட்டில் Pregnancy Test எடுத்த போட்டியாளர்… வெளியான தகவலால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும்  ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்புக்கு அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டது. இன்றுடன் 49 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களை தொடர்ந்து 5 வைல்ட் கார்டு  போட்டியாளர்களும் களமிறங்கினர். தற்பொழுது வரை பிக் பாஸ் வீட்டை விட்டு 8 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர்.

 

   

இவர்களில் இறுதியாக கடந்த வாரம் ஐஸு பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார். நாளுக்கு நாள் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும்  பஞ்சம் இல்லாமல், இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. இதை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது . இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று கானா பாலா தான் வெளியேறுவார் என கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியானது தமிழை போன்றே பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.  அப்படி ஹிந்தியில் தற்போது 17ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஹிந்தி நடிகை அங்கிதா லோகன்டே மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் விக்கி ஜெயின் ஆகியோர் போட்டியாளர்களாக வந்திருக்கின்றனர். நடிகை அங்கிதா சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி என்பதும்  குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் நடிகை அங்கிதா பிக் பாஸ் வீட்டில் pregnancy டெஸ்ட் எடுத்திருப்பதாக கூறி இருக்கிறார். அதற்கான ரிசல்ட்டுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தான் வீட்டுக்கு செல்ல விரும்புவதாகவும் அவர் கூறி இருக்கிறார். தற்பொழுது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

More in CINEMA

To Top