EX MP-யின் செல்போனில் சிக்கிய 90 ஆபாச வீடியோ…. செல்போனை ஆன் செய்ததும் வெளிவந்த பகீர் உண்மை… சிக்கிய வாட்ஸ்அப், நெட்ஃபிலிக்ஸ்….!

Spread the love

பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவின் சிறை அறையிலிருந்து ஸ்மார்ட்போன், சார்ஜர், பென்டிரைவ் மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய குறிப்பேடு ஆகியவை சோதனை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. மத்திய குற்றப்பிரிவு (CCB) அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின் போது இந்தத் தடைசெய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் சிறை வளாகத்தினுள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, விஐபி கைதிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு வசதிகள் மற்றும் சிறையின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த பலத்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ரேவண்ணாவின் போனில், 90 ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக சிறைக்குள் போன் வைத்திருந்தது சர்ச்சையானது. இந்நிலையில், அவரது போனை கைப்பற்றிய அதிகாரிகள், அதில் 80-90 ஆபாச வீடியோக்கள், ஆபாச போட்டோக்கள் இருந்ததை கண்டறிந்தனர். வீட்டில் வேலை செய்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் பிரஜ்வால் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

கைப்பற்றப்பட்ட ஸ்மார்ட்போனில் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஓடிடி (OTT) செயலிகள் பயன்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட குறிப்பேட்டில் ரேவண்ணாவின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் பல தொலைபேசி எண்கள் இருந்துள்ளன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கடமை தவறியதாக உதவி சிறைக் கண்காணிப்பாளர் இரன்னா ரங்கபூர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன், சிறைக் கண்காணிப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பரப்பன அக்ரஹாரா காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது அறை தோழர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஸ்மார்ட்போன் எவ்வாறு சிறைக்குள் கொண்டு வரப்பட்டது, அதற்கு உதவிய அதிகாரிகள் யார் என்பது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறை வளாகத்தில் இயங்கும் ஜாமர்களையும் மீறி குறிப்பிட்ட பிராண்ட் செல்போன் பயன்படுத்தப்பட்டது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“சொத்தை ஆசிரமத்திற்கு தருவேன்”…. ஆத்திரத்தில் பெற்ற தந்தையையே வெட்டிக்கொன்ற என்ஜினீயர் மகன்…. அடக்கத்திற்கு முன் வெளிவந்த பகீர் உண்மை….!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சொத்து தகராறு காரணமாக ஓய்வு பெற்ற மாநகரப் பேருந்து ஓட்டுநர் கத்தியால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட…

18 minutes ago

“விஜய் அரசுக்கு முதல் நெருக்கடி”…. ரூ. 45.9 லட்சம் டெண்டர் ஊழலை அம்பலப்படுத்திய அறப்போர் இயக்கம்…. அமைச்சர் சரத்குமார் பதவிக்கு ஆப்பு….!

தமிழகத்தில் தவெக அரசு அமைந்த சில மாதங்களிலேயே, அரசின் மீதான முதல் ஊழல் குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

31 minutes ago

“தாலிபான்களிடம் சிக்கிய கேரள பெண் யூடியூபர்”…. நடுவழியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… கதறிய அருணிமா…. ஆப்கானிஸ்தானில் பதறவைக்கும் சம்பவம்…!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கடுமையான ஆட்சிக்கிடையே, கேரளாவைச் சேர்ந்த பிரபல பெண் யூடியூபரும் பயண வழிகாட்டியுமான அருனிமா அங்கு சென்ற பயணம்…

41 minutes ago

தாராபுரம் – மதுராந்தகம் இடைத்தேர்தல்…. ஒரே முடிவால் மாறிய தேர்தல் கணக்கு… CM விஜய்க்கு செக் வைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்…. அடுத்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் (CPI)…

50 minutes ago

அதிகாலை 6 மணிக்கு வந்த அந்த ஒரு மெயில்…. “இன்றே கடைசி நாள்”…. IT ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி…. AI வைத்த ஆப்பு….!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle), தனது விரிவான மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகப் பல ஊழியர்களைத்…

58 minutes ago

குஷியோ குஷி…. கல்வி உதவித்தொகை உயர்வு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

தமிழ்நாட்டில் கல்வித்துறை வளர்ச்சி மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிட சமூகங்களைச்…

1 மணத்தியாலம் ago