அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle), தனது விரிவான மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகப் பல ஊழியர்களைத் திடீரென பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அதிகாலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், “இன்றே உங்களின் கடைசி வேலை நாள்” எனக் குறிப்பிடப்பட்டு, அவர்களின் பணியிடங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 21,000 பணியிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த திடீர் நடவடிக்கை ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிறுவன மறுசீரமைப்பின் அடுத்தகட்ட நகர்வாகவே பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீன தரவு மையங்களை (Data Centers) விரிவுபடுத்துவதில் ஆரக்கிள் நிறுவனம் தற்பொழுது மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறது. இதனால் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமையைச் சமநிலைப்படுத்தவும், மாறுபடும் வர்த்தகத் தேவைகளுக்கு ஏற்ப வளங்களை மாற்றியமைக்கவும் இந்த பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புதிய நடவடிக்கையின் மூலம் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ விவரங்களை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை என்றாலும், உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி என்பவரது தோட்டத்தில், 16 வயதே ஆன மனோஜ் என்ற சிறுவன் வேலை…
முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்…
திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை 7 மணி முதல்…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள், ஒல்லியான தோற்றம் கொண்ட நபர்…
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று…