“எனக்கு இந்த பிள்ளையே வேண்டாம்”… பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொன்ற தாய்… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குத்தி தேவி (40) என்ற கர்ப்பிணிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு பிரசவம் ஏற்பட்ட நிலையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை மற்றும் தாய் இருவரும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். இதனிடையே வார்டில் இருந்த மற்ற அனைவரும் தூங்கியதும் தேவி குழந்தையின் கழுத்தை துணியால் சுற்றி மூச்சு திணற செய்து கொடூரமாக கொலை செய்துள்ளார். நேற்று காலை தேவியின் மூத்த சகோதரி மைனா தேவி குழந்தையை பார்த்தபோது அசைவில்லாமல் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கழுத்தில் காயங்களும் இருந்தன. உடனே பதறிய அவர் உடனடியாக மருத்துவர்கள் இடம் சென்று விவரங்களை கூறியுள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது புதிதாக பிறந்த குழந்தையை தாய் தேவியே கொலை செய்தது தெரியவந்தது. அவருடைய கணவர் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் ஐந்தாவது பிறந்த குழந்தையை வளர்க்க போதிய வசதி இல்லாதது மற்றும் மன அழுத்தம் ஆகிய காரணங்களால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவரை கைது செய்த விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

தமிழகத்தில் இனி ரூ.1,000-ல் சொத்து மாற்றம்… பத்திரப்பதிவு ரொம்ப ஈஸி… அரசு சூப்பர் குட் நியூஸ்..!

தமிழகத்தில் குடும்பத் தலைவர் மறைவுக்குப் பிறகு, சொத்துக்களை வாரிசுதாரர்கள் பெயருக்கு மாற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும், அதிகப்படியான கட்டணச் சுமைகளும்…

3 minutes ago

“140 மணிநேரம்… 24 பிணங்கள்”… முதல்வர் விஜய் பதவியேற்ற 5 நாட்களில் 24 கொலைகளா?… ரத்தக் காடாகும் தமிழகம்?… புதிய அரசுக்குத் தொடரும் தலைவலி…!

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…

28 minutes ago

பற்றி எரியும் சென்னை ஓஎம்ஆர்… டெக் மகேந்திரா வளாகத்தில் பயங்கர தீ விபத்து… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…

33 minutes ago

அதிமுகவில் அதிரடி திருப்பம்… எஸ்பி வேலுமணி தான் எனக்கு தலைவர்.. எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த கேசி வீரமணி…!

அதிமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் அணிகள் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த…

41 minutes ago

குடும்பத்தலைவிகளுக்கு குட் நியூஸ்… வங்கி கணக்கிற்கு வருகிறது ரூ.2500… முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…

46 minutes ago

“டிரஸ் இல்லாம VIDEO அனுப்பு”… 14 வயது சிறுவர்களின் விபரீத விளையாட்டு… பள்ளி மாணவிக்கு நேர்ந்த கதி…!

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…

50 minutes ago