அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக அதிமுகவின் முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சியை ஒருங்கிணைத்து வலுப்படுத்த வேண்டும் என்று அந்த 5 பேரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்தபோது, அதற்கு அவர் “விரைவில் வெளியேறுங்கள்” என்று கோபமாகப் பேசியதாக கே.சி. பழனிசாமி தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து ஏற்கனவே 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தற்போது மேலும் 5 பேர் வெளியேறக்கூடும் என்ற இந்த அதிரடித் தகவல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெகவின் எழுச்சியும் அதிமுகவுக்குள் நிலவும் இந்த உட்கட்சிப் பூசல்களும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, அரசியல் வட்டாரத்தில் தற்போதைய மிக முக்கிய பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே…
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில்…
சாலை விபத்துகளில் சிக்குபவர்களைக் கட்சிப் பாகுபாடின்றி மீட்டு, அவர்களுக்குத் தகுந்த முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முன்னாள்…
அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பெங்களூருவில் வெறும் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 2.5 மணி நேரம்…
சமூக அழுத்தங்களுக்காகவும், சடங்குகளுக்காகவும் மட்டுமே வாழும் இன்றைய சூழலில், ஒரு குழந்தை பிறப்பிற்குப் பின்னால் இருக்கும் பொறுப்பை உணர்ந்து நடிகை…