BREAKING: மேலும் 5 MLA-க்கள் ராஜினாமா…! தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!!

By Swetha on ஆடி 6, 2026

Spread the love

அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக அதிமுகவின் முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சியை ஒருங்கிணைத்து வலுப்படுத்த வேண்டும் என்று அந்த 5 பேரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்தபோது, அதற்கு அவர் “விரைவில் வெளியேறுங்கள்” என்று கோபமாகப் பேசியதாக கே.சி. பழனிசாமி தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து ஏற்கனவே 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தற்போது மேலும் 5 பேர் வெளியேறக்கூடும் என்ற இந்த அதிரடித் தகவல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெகவின் எழுச்சியும் அதிமுகவுக்குள் நிலவும் இந்த உட்கட்சிப் பூசல்களும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, அரசியல் வட்டாரத்தில் தற்போதைய மிக முக்கிய பேசுபொருளாகவும் மாறியுள்ளது.