சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே புனல்வாசல் ஊராட்சியில் வசிப்பவர் தான் குமரேசன். இவர் லாரி பட்டறை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி செல்வமணி என்ற மனைவியும் மூன்று வயது குழந்தையும் உள்ளார்கள். இந்த நிலையில் நேற்று வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார் இவருடைய மனைவி செல்வமணி. அப்போது இவர்களுடைய மூன்று வயது குழந்தையான பூவரசன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது மாட்டுக் கொட்டகைக்கு சென்று விளையாடி இருக்கிறார்.
அப்போது அங்கிருந்த குருணை மருந்தை குழந்தை எடுத்து வாயில் வைத்துள்ளது. இதை கண்ட செல்வமணி அதிர்ச்சியடைந்து குழந்தையை கையில் தூக்கி உள்ளார். வாயை கழுவி விட்டு பிறகு கணவருக்கு தகவல் கொடுத்துவிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார்கள். ஆனால் குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…