வெறும் 3 ஆயிரம் பணத்துக்கு ஆசைப்பட்டு 20 லட்சம்… ஆம்னி பேருந்தில் நள்ளிரவில் ட்விஸ்ட்… சென்னை டூ புதுக்கோட்டை ரூட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்…!

Spread the love

பொதுவாகவே இரவு நேரங்களில் போலீசார் பல காரணங்களுக்காக வாகன சோதனை நடத்துவது வழக்கம். அப்படி சோதனை செய்யும் போது பழைய குற்றவாளிகள் மற்றும் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் சிக்குவார்கள். இதனிடையே புதுக்கோட்டையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று அதிகாலை வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுகின்றதா என்பது குறித்து சோதனை நடத்தினர். அப்போது சென்னையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி செல்லக்கூடிய ஆம்னி பேருந்தை புதுக்கோட்டை கருவேப்பிலான் ரயில்வே கேட் அருகே போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகப்படும் படியாக ஒருவர் வைத்திருந்த பையை போலீசார் திறந்து பார்த்தபோது கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. அந்தப் பணம் ஹவாலா என்று போலீசாருக்கு தெரிய வந்த நிலையில் அந்த பணம் இருந்த பையை போலீசார் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த அமீர் (48) என்பது தெரிய வந்தது. அதனை தன்னிடம் ஒருவர் கொடுத்து புதுக்கோட்டையில் ஒருவரிடம் கொடுக்குமாறு கூறியதாகவும் அதற்கு 3000 ரூபாய் பணம் தருவதாக கூறி தந்து அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதே சமயம் அந்த பணத்தை புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து ஒருவர் வாங்கி கொள்வார் என்று கூறியதாக போலீசாரிடம் அந்த நபர் தெரிவித்தார். அந்தப் பையன் மொத்தம் 20,81,150 ரூபாய் பணம் இருந்த நிலையில் அதனை பறிமுதல் செய்து அமீரை புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அந்த பணம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று முன்னுக்கு பின் முரணாக அவர் கூறி வந்தார். பிறகு ஸ்டேஷனுக்கு விரைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணத்தை கொடுத்து அனுப்பியது யார், அதனை யாரிடம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

3 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

4 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

4 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

4 மணத்தியாலங்கள் ago