சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான போர்க்களம் போன்றக் காட்சி பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. பொதுவாகப் பாம்புகளைக் கண்டால் விலங்குகள் விலகிச் செல்லும், ஆனால் இந்த வீடியோவில் அந்த நாய் அச்சமின்றிப் பாம்பை எதிர்த்து நின்ற விதம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுமார் 1 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், ராஜநாகம் தனது படத்தை விரித்து நாயைத் தாக்க முற்படுகிறது. அதற்கு இணையாக அந்த நாயும் பின்வாங்காமல், மின்னல் வேகத்தில் பாம்பின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதோடு, சளைக்காமல் குரைத்துத் தனது வீரத்தை வெளிப்படுத்துகிறது. புதருக்குள் மறைந்தும், மீண்டும் வெளியே வந்தும் இவை இரண்டும் நடத்திய மோதல் ஒரு த்ரில்லர் திரைப்படக் காட்சி போல அமைந்துள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இயற்கையின் விசித்திரமான மோதல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த வீடியோ, தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. இறுதியில் அந்த மோதல் என்ன ஆனது என்பது குறித்துத் தெளிவானத் தகவல் இல்லை என்றாலும், விலங்குகளின் தற்காப்புத் திறன் மற்றும் துணிச்சலுக்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இதுபோன்ற ஆபத்தான சூழல்களில் செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…
நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென தீ…