மும்பை மாநகரில் கடந்த 36 மணி நேரத்தில் மட்டும் அடுத்தடுத்து 12 சிறுவர்கள் மாயமான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓஷிவாரா, ஆண்டாப் ஹில், மான்குர்ட் மற்றும் சிவாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். விளையாடச் சென்றவர்கள், கடைக்குச் சென்றவர்கள் மற்றும் டியூஷன் சென்றவர்கள் எனப் பலரும் வீடு திரும்பாதது பெற்றோர்களிடையே கடும் பீதியை கிளப்பியுள்ளது. இந்தத் தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து மாநகர காவல்துறை ‘High Alert’ விடுத்துள்ளதோடு, குழந்தைகளைத் தனியாக விட வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாயமான சிறுவர்களைக் கண்டறிய 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இது ஏதேனும் கடத்தல் கும்பலின் கைவரிசையா அல்லது வேறு ஏதேனும் மர்மமான காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் மும்பை நகரில் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சியின் போது, ஜஸ்பிரித் பும்ராவின் அதிவேக யார்க்கர் பந்து…
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், 38 வயது பெண் ஒருவர் தனது மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட 18 வயது இளைஞனுடன் ஓடிச் சென்ற…
சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட திருமணத்தில், மணமகளின் சகோதரர் மணமகன் வீட்டாருக்கு 24 காரட் தங்க பிஸ்கட்டுகளைப் பரிசாக…
சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் குறித்து 'கேம் ஆப் லோன்ஸ்' பட நடிகை எஸ்தர் நோரானா…
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று, சசிகலா 'அம்மா அதிமுக' என்ற புதிய கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத்…
பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அஜீத்குமாருடன் ராஜா என்ற படத்தில் நடிகர் வடிவேலு நடித்தார். அப்போது அஜீத்குமாரை ஷூட்டிங் இடைவேளையில்…