இளைஞர்களே தோத்துடுவாங்க…! திருப்பதி மலையில் 3550 படிக்கட்டுகளை அசால்ட்டாக ஏறிய 116 வயது பாட்டி… பக்தியின் சிகரம்…!

Spread the love

ஆன்மிகத்திற்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி ஒருவர் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். தள்ளாடும் வயதிலும், ஏழுமலையான் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற பக்தியால் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி, ஒட்டுமொத்த பக்தர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்களில் பெரும்பாலான பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காகவும், புண்ணியம் பெற வேண்டியும் திருப்பதியிலிருந்து அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய மலைப்பாதைகள் வழியாக நடந்தே செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த செங்குத்தான மலைப்பாதையை கடப்பது இளைஞர்களுக்கே சவாலாக இருக்கும் சூழலில், இந்த மூதாட்டியின் துணிச்சல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி தனது குடும்பத்தினரின் துணையோடு திருமலைக்கு வந்துள்ளார். வாகனங்களில் செல்லாமல், பாரம்பரிய முறைப்படி ஸ்ரீவாரிமெட்டு நடைபாத வழியாக செல்ல அவர் முடிவெடுத்தார். அதன்படி, சுமார் 9 கிலோமீட்டர் தூரம் கொண்ட கரடுமுரடான மலைப்பாதையில், மொத்தம் 3,550 படிக்கட்டுகளையும் தனது தள்ளாத வயதிலும் தளராத நம்பிக்கையுடன் ஒவ்வொன்றாக ஏறி திருமலையை அடைந்துள்ளார். பின்னர், அங்குள்ள திவ்யதரிசன வரிசையில் சென்று ஏழுமலையானை மனமுருகி வழிப்பட்டார்.

வயோதிகத்தால் ஏற்படும் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல், இறைவனை நேரில் காண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அந்த மூதாட்டி மலை ஏறிய காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பக்தர்கள் பலரும், “இது வெறும் உடல் பலத்தால் சாத்தியமானது அல்ல, மூதாட்டியின் அசைக்க முடியாத தூய பக்தியால் மட்டுமே சாத்தியம்” என்று நெகிழ்ச்சியுடன் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

SATHISH R

Recent Posts

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

16 minutes ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

18 minutes ago

“வெறும் ரூ100-க்காக இப்படியா…?!” கணவன் தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49). இவருக்கும் இவரது மனைவி பிரியங்காவிற்கும்…

27 minutes ago

பிரேசிலை வீழ்த்திய ஆவேசம்… ஆடை இல்லாமல் இருந்த ஹாலாந்தை கட்டிப்பிடித்த நார்வே இளவரசி… உடைமாற்றும் அறையில் பரபரப்பு…!

2026 ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்று-16 போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2-1 என்ற…

28 minutes ago

“என் மகளுக்கு சுதந்திரம் தான் முக்கியம்…!” கல்யாண மேடையில் மணமகனின் அராஜகம்… திருமணத்தையே நிறுத்திய மாஸ் தந்தை…!”

ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் அருகே உள்ள ரச்சார்லா மண்டலம் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும்…

34 minutes ago