மும்பையின் அடையாளமான பந்த்ரா-வொர்லி கடல் பாலம் (Sea Link) அருகே இளைஞர் ஒருவர் எவ்வித அசைவும் இன்றி, நீண்ட நேரமாக விசித்திரமான நிலையில் சிலையாக நின்று கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞரின் உடல்நிலை மற்றும் நடத்தை, அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் ‘ஸைலாசின்’ (Xylazine) எனப்படும் ‘ஜாம்பி டிரக்’ போதைப் பொருளைப் பயன்படுத்தியவர்களின் அறிகுறிகளுடன் ஒத்துப் போவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த ‘ஜாம்பி டிரக்’ மனிதர்களின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி, அவர்களைச் சுயநினைவற்ற நிலைக்குத் தள்ளுவதுடன், பார்ப்பதற்கு உயிருள்ள பிணங்களைப் போல (Zombies) மாற்றும் தன்மை கொண்டது. மும்பையில் இதுவரை இதுபோன்ற போதைப் புழக்கம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், இந்த வைரல் வீடியோ பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. இந்த கொடிய போதைப் பொருள் மும்பை இளைஞர்களிடையே ஊடுருவத் தொடங்கிவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மும்பை காவல்துறையினர், வீடியோவில் உள்ள இளைஞர் யார்? அவர் உண்மையில் போதைப்பொருள் பயன்படுத்தினாரா அல்லது அவருக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக மாறி வரும் இந்த போதை கலாச்சாரம் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்க கடுமையான கண்காணிப்பு தேவை என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் (AAP) முக்கிய முகமாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த ராகவ் சதா, திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய…
ஆயிரக்கணக்கான எறும்புகளை உயிரோடு தீயிட்டு எரிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு நபர்…
பாலிவுட் நடிகர் அன்னு கபூர், நடிகை தமன்னாவின் உடல் தோற்றம் குறித்துப் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 'Aaj…
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வேட்பாளர்களின் சொத்து விவரங்களைச் சரிபார்க்கும் நடைமுறை தொடங்கப்படும் என்று வருமான வரித்துறை (IT) சென்னை உயர்…
உலக அளவில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்களால் தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வரும்…
பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிஸ் பாத்திமா மற்றும் அக்கட்சியினர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு அக்கட்சியின்…