உத்தரபிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டம், பராத் நகரில் உள்ள காந்தி சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகள் வைரலாகியுள்ளன. ஒரு இளைஞர் மின்மாற்றியின் கம்பிகளைப் பிடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நேரடி தற்கொலையின் ஒரு நிமிடம் 16 வினாடிகள் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன, இதில் அந்த இளைஞர் மின் வயர்களை தொட்டதும் பயங்கரமாக தீப்பிடிப்பதைக் காட்டுகிறது. றது. பாக்பத் மாவட்டம், பராத் நகரில் உள்ள காந்தி சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த இளைஞன் ராம்கோபால் சைனியின் மகன் தருண் சைனி (18) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் காட்சிகளின்படி, தருண் சைனி தனது மொபைல் போனில் எதையோ பார்த்துக்கொண்டு சுற்றி திரிந்துள்ளார்.
பின்னர் அவர் மொபைல் போனை தனது சட்டைப் பையில் வைத்துக்கொண்டு மின்மாற்றி பொருத்தப்பட்டிருக்கும் பிளாட்பாரத்தில் மின்மாற்றியில் இணைக்கப்பட்ட கம்பியைப் பிடிக்கிறார். கம்பியைத் தொட்டவுடன், அவர் தீயில் கருகிவிட்டார். தகவல் கிடைத்ததும், குடும்பத்தினர், காவல்துறை மற்றும் மின்சாரக் கழக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மின்கம்பி துண்டிக்கப்பட்டது. மக்களின் உதவியுடன், போலீசார் உடலை கம்பிகளில் இருந்து பிரித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தருண் எப்படி, ஏன் தற்கொலை செய்தார்? என்பது தங்களுக்குத் தெரியவில்லை என்று குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மும்பையில் ஊபர் ஓட்டுநர் ஒருவருக்கும், ஷிவானி என்ற பெண் பயணிக்கும் இடையே கூடுதல் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மற்றும்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளாண்ட் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு, தங்களது வீட்டின் கழிவறையிலிருந்து வினோதமான…
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில், பயிற்சி நிறைவு விழாவின் போது கேப்டன் பரத் பரத்வாஜ்…
தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியரான கோபிநாத் என்பவரை…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தின் பிகாபூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாருண் விகாஸ்…
மின்துறை டெண்டர்களில் கடந்த காலங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், தற்போதைய மின்வெட்டுப் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே 20 லட்சத்திற்கும்…