உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தின் பிகாபூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாருண் விகாஸ் கந்த் பகுதியில் உள்ள குவாந்தாட் கிராமத்தைச் சேர்ந்த சோப்நாத் என்பவரின் 6 மாதக் குழந்தை ஆரவ், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த ஒரு கிராம்பை எடுத்து குழந்தை வாயில் போட்டுள்ளது.
விளையாடும் போது வாயில் போட்ட அந்த கிராம்பு, குழந்தையின் தொண்டையில் திடீரென மாட்டிக் கொண்டது. இதனால் குழந்தைக்கு மூச்சு விடுவதில் கடுமையான சிரமம் ஏற்பட்டு, சிறிது நேரத்திலேயே அவதிப்பட்டு அழத் தொடங்கியுள்ளது. குழந்தையின் நிலைமை மோசமடைவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவனை பிகாபூர் சமூக சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த 6 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பரிசோதனை செய்த மருத்துவர் அதுல் மிஸ்ரா, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினார். ஆரவ் அந்த குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசு என்பதால், அவனது திடீர் மரணம் பெற்றோரையும் ஒட்டுமொத்த கிராம மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறிய குழந்தைகள் வீட்டில் விளையாடும் போது அவர்களை தனியாக விடாமல், எப்போதும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் ரூ.2.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில், மாநகராட்சி மேயர்…
அதிமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.…
தமிழ்நாட்டில் நிலவும் கூட்டணி அரசியலை மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்தி, வெறும் ஐந்து மாத இடைவெளியில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (46) என்ற எலக்ட்ரீசியனுக்கும், அவரது மனைவி ஹசீனா பீவி (36)…
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல்…
தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசு மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மீது ஒரு பகீர் குற்றச்சாட்டை…