மின்துறை டெண்டர்களில் கடந்த காலங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், தற்போதைய மின்வெட்டுப் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே 20 லட்சத்திற்கும் அதிகமான ஹார்டு டிஸ்க்குகள் மாயமானதாகக் கூறுகிறார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி மாறினாலும் துறையின் அதிகாரிகள் மாறப்போவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், கடந்த ஆட்சியில் முறையான வழிமுறைகளுடன்தான் டெண்டர்கள் விடப்பட்டன என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், “ஆடத் தெரியாதவர்கள் வீதி கோணல்” என்று சாக்குப்போக்கு சொல்வது போல தற்போதைய மின்துறை அமைச்சரின் பேச்சுகள் அமைந்துள்ளன என்று சாடினார். அத்துடன், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்றும், தி.மு.க அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பஹேடி காவல் எல்லைக்குட்பட்ட நகரி பைபாஸ் சாலையில் நடுரோட்டில் வைத்து நடந்த…
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பிரபலமான தாமெல் பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.…
அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகச் சிறப்பாகச் செயல்பட்ட K.A. செங்கோட்டையனின் துறை விரைவில் மீண்டும் மாற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியால் திமுக சுணக்கமடைந்துவிட்டது என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தொண்டர்கள் மத்தியில் தேக்கநிலையைப் போக்கி உற்சாகத்தை…
மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற ராம் காட் பகுதிக்கு சென்ற ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம்…
2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரதமர் வேட்பாளராக உருவெடுக்கக்கூடும் என்று தமிழக அமைச்சர்கள்…