மின்துறை டெண்டர்களில் கடந்த காலங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், தற்போதைய மின்வெட்டுப் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே 20 லட்சத்திற்கும் அதிகமான ஹார்டு டிஸ்க்குகள் மாயமானதாகக் கூறுகிறார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி மாறினாலும் துறையின் அதிகாரிகள் மாறப்போவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், கடந்த ஆட்சியில் முறையான வழிமுறைகளுடன்தான் டெண்டர்கள் விடப்பட்டன என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், “ஆடத் தெரியாதவர்கள் வீதி கோணல்” என்று சாக்குப்போக்கு சொல்வது போல தற்போதைய மின்துறை அமைச்சரின் பேச்சுகள் அமைந்துள்ளன என்று சாடினார். அத்துடன், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்றும், தி.மு.க அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
அதிமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.…
தமிழ்நாட்டில் நிலவும் கூட்டணி அரசியலை மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்தி, வெறும் ஐந்து மாத இடைவெளியில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (46) என்ற எலக்ட்ரீசியனுக்கும், அவரது மனைவி ஹசீனா பீவி (36)…
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல்…
தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசு மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மீது ஒரு பகீர் குற்றச்சாட்டை…
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு கொடூரமான இரட்டைக் கொலைச்…