ஐயோ டாய்லெட்ல என்ன இது?… கமோடிற்குள் இருந்த விசித்திர உருவம்.. உள்ளே எட்டிப்பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அலறியடித்த குடும்பம்..!

Spread the love

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளாண்ட் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு, தங்களது வீட்டின் கழிவறையிலிருந்து வினோதமான சத்தம் கேட்டுள்ளது. சந்தேகமடைந்து அவர்கள் கழிவறைக்குள் சென்று பார்த்தபோது, அங்குள்ள வெஸ்டர்ன் டாய்லெட் கமோடிற்குள் ஏதோ ஒரு உயிரினம் இருப்பது தெரியவந்தது. அதை ஒரு பாம்பு என்று தவறாகப் புரிந்துகொண்ட குடும்பத்தினர், பயந்துபோய் உடனடியாக கழிவறை கதவை மூடிவிட்டு, பாம்புகளைப் பிடிக்கும் நபருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் பணியாளர் கமோடைச் சோதித்துப் பார்த்தபோது, அது பாம்பு அல்ல, மாறாக ஒரு பெரிய உடும்பு என்பது தெரியவந்தது. மிகவும் குறுகலான அந்த கமோட் பகுதிக்குள் உடும்பு சிக்கியிருந்ததால், அதை வெளியே எடுப்பது மீட்புப் பணியாளருக்கு பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும், சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த உடும்பை அவர் பத்திரமாக மீட்டெடுத்தார். அதன் பின்னரே குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பொதுவாக உடும்புகள் 5 முதல் 6 அடி நீளம் வரை வளரக்கூடியவை. இவை மனிதர்களைத் தாக்குவதில்லை என்றாலும், தங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்தால் மட்டுமே தாக்கும் குணம் கொண்டவை, மேலும் இவை விஷத்தன்மை அற்றவை என்று வனவிலங்கு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் உடும்புகளை வேட்டையாடுவதோ அல்லது கடத்துவதோ வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றமாகும் என்பதால், மீட்கப்பட்ட அந்த உடும்பு பாதுகாப்பாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Swetha

Recent Posts

அதிரும் அரசியல்..! திராவிடக் கட்சிகளின் ரகசிய உடன்பாடு..? விஜய்யை வீழ்த்த கைகோர்க்கும் திமுக – அதிமுக..!!

அதிமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.…

18 minutes ago

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான்… தாராளம் காட்டிய தளபதி விஜய்..!!

தமிழ்நாட்டில் நிலவும் கூட்டணி அரசியலை மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்தி, வெறும் ஐந்து மாத இடைவெளியில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya…

28 minutes ago

நள்ளிரவில் அழுகுரல்…! கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்.. உறைந்து நின்ற 4 குழந்தைகள்… அதிகாலையில் வாஷ்பேசினில் எலக்ட்ரீஷியன் செய்த பகீர் காரியம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (46) என்ற எலக்ட்ரீசியனுக்கும், அவரது மனைவி ஹசீனா பீவி (36)…

35 minutes ago

அமித் ஷா பேச்சை தட்டிய அண்ணாமலை.. டெல்லியில் ரகசிய மூவ்… ஆர்வக்கோளாறில் போஸ்டர் அடிக்கும் ஆதரவாளர்கள்..!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல்…

39 minutes ago

விருத்தாசலம் முழுக்க சுத்திப் பார்த்துட்டேன்.. டாஸ்மாக் கடைகள் மூடப்படல… பிரேமலதா விஜயகாந்த் பகீர் குற்றச்சாட்டு..!!

தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசு மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மீது ஒரு பகீர் குற்றச்சாட்டை…

47 minutes ago

“நீ இருக்கறதோட செத்துப்போ” அக்காவுடன் கள்ளத்தொடர்பு வைத்த கணவன்.. நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி..!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு கொடூரமான இரட்டைக் கொலைச்…

53 minutes ago