பகீர்… கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மற்றும் மாமனாரை… 19 வயது கள்ள காதலனுடன் பெட்ரோல் ஊற்றி எரித்த இளம்பெண்.. திரில்லர் லெவலுக்கு பிளான் போட்டும் சிக்கியது எப்படி…?

Spread the love

கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை செல்லும் சாலையோரத்தில், கடந்த மாதம் 11-ஆம் தேதி அரை கிலோ மீட்டர் இடைவெளியில் இரண்டு ஆண் சடலங்கள் தீயில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. சடலங்களை மீட்ட தாலுகா போலீசார், அவை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஊற்றி எரிக்கப்பட்டிருந்த அந்த நபர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களைக் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் அதிரடி விசாரணையில், எரிக்கப்பட்டவர்கள் பாலகுறி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ்குமார் (36) மற்றும் அவரது தந்தை செல்லப்பன் (64) என்பது தெரியவந்தது. ராணுவ வீரரான மகேஷ்குமாரின் மனைவி பானுப்பிரியாவுக்கும் (29), மேல்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் (19) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இவர்களது உறவுக்கு மகேஷ்குமாரும், அவரது தந்தையும் இடையூறாக இருந்ததால், இருவரையும் கத்தியால் குத்திக் கொலை செய்து, சடலங்களை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று தீ வைத்து எரித்தது அம்பலமானது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் தனிப்படை போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

இக்கொலைச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், சட்ட ஒழுங்கு பதற்றத்தையும் ஏற்படுத்தியதால், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார் குற்றவாளிகளான பூவரசன் மற்றும் பானுப்பிரியா ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, போலீசார் அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தனர். தற்போது பூவரசன் சேலம் மத்திய சிறையிலும், பானுப்பிரியா கோயம்புத்தூர் மகளிர் சிறப்பு சிறையிலும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Swetha

Recent Posts

“சும்மா வாங்கிப் பார்த்தேன்.. ஒரே ஒரு போன் கால்”… ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றிய ரூ.58 கோடி…. இந்திய பெண்ணுக்கு அடித்த மெகா ஜாக்பாட்…!

ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிவிடும் என்பதற்கு சாட்சியாக, டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அபுதாபி…

4 seconds ago

விஜய் அலைக்கு இபிஎஸ் வைத்த 365 நாள் செக் பாயிண்ட்… அதிமுகவிலிருந்து விலகியவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய மும்முனைப் போட்டியைச் சந்தித்திருக்கிறது.…

4 minutes ago

“விஜய் அமைச்சரவையில் திடீர் திருப்பம்”…. ஜான் ஆரோக்கியசாமிக்கு புதிய பதிவு?…. கோட்டை வட்டாரத்தை அதிரவைக்கும் தவெகவின் புதிய அதிகாரப் போட்டி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு…

12 minutes ago

“3,000 பேர் இறந்தாலும் பரவாயில்லை”…. ஈரானில் அரங்கேறும் அதிரவைக்கும் ‘கல்லறை’ ரகசியம்.. உலகையே உற்றுநோக்க வைக்கும் கமேனியின் கடைசிப் பயணம்….!

ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…

16 minutes ago

“அட பாவிங்களா… மது வாங்குவதில் நீயா, நானா சண்டை…? நண்பனை ஏரிச் சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்… காஞ்சியில் நடந்த பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…

19 minutes ago

‘மெனோபாஸ்’ பற்றி த்ரிஷா சொன்ன அந்த ஒரு வார்த்தை… நடிகைகள் பேச பயந்த ரகசியம்… பாராட்டும் நெட்டிசன்கள்…!

தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…

20 minutes ago