உத்திரபிரதேசம் மாநிலத்தில் பேச மறுத்ததால் இளம் பெண் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நிஷா சிங் (33) என்பவருக்கு திருமணம் ஆகி அமித் சவுகான் என்ற கணவர் உள்ளார். இதனிடையே நிஷா கடந்த ஆகஸ்ட் மாதம் தனது தந்தை பல்ராம் சிங்கை பார்த்துவிட்டு மருத்துவமனை செல்வதற்காக சென்று உள்ளார். அப்போது நிஷாவை வழிமறித்த தீபக் என்ற வாலிபர் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் நிஷா அவருடன் பேச மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபக் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அந்த இளம் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் வலியால் துடித்த நிஷா தனது ஸ்கூட்டரிலேயே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பலராம் சிங்கை தொடர்பு கொண்ட மருத்துவர் நிஷா மோசமான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உடனே மருத்துவமனைக்குச் சென்ற பல்ராம் தனது மகளிடம் விசாரித்த போது தீபக் என்ற இளைஞர் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தன்னை எரித்து கொலை செய்ய முயற்சி ததாகவும் கூறி அழுதுள்ளார். மேலும் தன்னை காப்பாற்றும்படி தந்தையிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த நிஷா பரிதாபமாக உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபக் மற்றும் அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில்…
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், கார் மோதிய விபத்தில் பெண்ணொருவருக்குச் சிறு காயம் ஏற்பட்டதற்காக, தொழிலதிபர் ஒருவரை ஒரு கும்பல்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் நிலையில்,…
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீரங்கம் ரமேஷின்…
பெங்களூரு மாகடி சாலையில் உள்ள பிரசன்னா திரையரங்கில், மறைந்த பழம்பெரும் நடிகர் விஷ்ணுவர்தனுக்காக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கட்-அவுட்…
கோயம்புத்தூர் அரசியல் களம் தேர்தல் முடிந்த பின்னரும் தணியாத வெப்பத்துடன் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு மற்றும் வடக்கு…