“நடிகர் ரஜினி கூப்பிட்டும் நான் ஏன் போகல தெரியுமா?”…. அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு உண்மை… களமிறங்கும் புதிய படை…!

Spread the love

தமிழக பாஜகவின் முக்கிய முகமாக விளங்கிய அண்ணாமலை, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த சில காலமாகவே கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் இருந்த அவர், சமீபத்தில் டெல்லிக்குச் சென்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிதின் நபின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சற்று முன்னர் சமூக வலைதள நேரலையில் தோன்றிய அண்ணாமலை, தனது இந்த அரசியல் முடிவிற்கான காரணங்களையும், தமிழக அரசியலில் தனது அடுத்தகட்ட அதிரடி நகர்வுகளையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.

அவர் தனது நேரலை உரையில், “ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் நான் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தேன்” என்று குறிப்பிட்டார். மேலும், கடந்த 18 மாதங்களாகவே பாஜக தலைமைக்கும் அவருக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நீடித்து வந்ததாகவும், கடந்த டிசம்பர் 4ஆம் தேதியே தனது விலகல் முடிவை தலைமைக்குத் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். கட்சி மேலிடம் தன்னை 2026 சட்டமன்றத் தேர்தல் வரை பொறுத்திருக்குமாறு அறிவுறுத்தியதால், அதற்கேற்ப தேர்தல் வேலைகளைச் செவ்வனே முடித்துக் கொடுத்துவிட்டு, தற்போது சரியான தருணத்தில் வெளியேறியிருப்பதாக அவர் விளக்கமளித்தார்.

தனது பழைய நினைவலைகளைப் பகிர்ந்த அண்ணாமலை, ஐஐஎம்மில் படித்துக் கொண்டிருந்தபோது கேப்டன் விஜயகாந்தின் தேமுதிகவில் மூன்று மாதங்கள் இன்டர்ன்ஷிப் (Internship) செய்ததே அரசியலைத் தான் முதன்முதலில் அருகில் இருந்து பார்க்கக் கிடைத்த வாய்ப்பு என்றார். தொடர்ந்து பேசியவர், 2020ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சியில் இணையுமாறு தமக்கு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அதற்கு முன்பே பாஜக மூத்த தலைவர் பி.எல். சந்தோஷிற்கு வாக்குறுதி அளித்திருந்ததால் அந்த அழைப்பை ஏற்க முடியாமல் போனது என்றும், பின்னர் சென்னை திரும்பியதும் ரஜினியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரியதாகவும் உருக்கமாகத் தெரிவித்தார். மேலும், பாஜகவில் இருந்த 6 ஆண்டுகளில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்தது உட்பட, தமிழ்நாட்டின் உரிமைகளையும், தமிழ் உணர்வுகளையும் தான் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததே இல்லை என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இறுதியாக, “நான் பெருமை மிகுந்த இந்தியன், பாரம்பரியத் தமிழன் என்ற அடையாளத்தோடு ஒரு புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்குகிறேன்” என்று அண்ணாமலை பிரகடனம் செய்தார். தனிநபர் துதிபாடும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், தன் புதிய இயக்கத்தில் நிரந்தர எம்.எல்.ஏ, நிரந்தர அமைச்சர் என யாரும் கிடையாது, சாமானியர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதற்காக கோவையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்றும், அரசியலில் ஆர்வமுள்ளவர்கள் www.wetheleader.org என்ற இணையதளத்தில் இணைந்து பயிற்சி பெறலாம் என்றும் அழைப்பு விடுத்தார். தமிழகத்தின் வளர்ச்சியை முதன்மைப்படுத்தி, தூய்மையான மற்றும் நாகரிகமான அரசியலை முன்னெடுத்து, வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அடுத்தடுத்த தேர்தல்களில் தங்களது புதிய இயக்கம் தடம் பதிக்கும் என்றும் அண்ணாமலை உறுதியாகத் தெரிவித்தார்.

Nanthini

Recent Posts

“புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…” பொறி விற்று பிழைத்த ஏழை… அடித்து தூக்கி எறிந்து அராஜகம் செய்த ரவுடி…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக்…

20 minutes ago

“இன்ஸ்டாகிராமில் மர்ம பதிவு…” 48 மணி நேரத்தில் அழுகிய நிலையில் பெண் போலீசின் சடலம்… நடந்தது என்ன…? பெரும் பரபரப்பு சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D…

30 minutes ago

“ரகசிய 6 போன் கால்கள்…” கோடீஸ்வரர் கொலையில் அதிரடித் திருப்பம்… பெற்ற தந்தையை கொல்ல கூலிப்படைக்கு ஸ்கெட்ச் போட்ட மகனா…? திடீர் டுவிஸ்ட்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி…

50 minutes ago

“செங்குத்தான ஏற்றத்தில் பின்னோக்கி பாய்ந்த லாரி…” நொடி பொழுதில் மரணத்தின் பிடியில் சிக்கிய பெண்… வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்…!!

செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…

60 minutes ago

“அங்கிட்டும் போக முடியாம… இங்கிட்டும் வர முடியாம…” ஜன்னல் கம்பிக்குள் சிக்கிய பலே திருடன்…! கம்புகளாலும் கற்களாலும் வீசியடித்த பொதுமக்கள்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராஜாராம் நகர் சொசைட்டியில் உள்ள என்.ஆர்.ஐ ஒருவரின் பூட்டிய வீட்டிற்குள், நள்ளிரவில் திருடன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago