“நள்ளிரவில் இளம்பெண்ணின் அலறல் சத்தம்”… உல்லாசத்திற்கு மறுத்ததால் துடிக்கத் துடிக்கக் கொன்ற பிளம்பர்… மதுபோதையில் அரங்கேறிய கொடூரம்….!

Spread the love

சென்னையில் போதை தலைக்கேறிய நிலையில் சாலையோரப் பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர், அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த 26 வயதான ஷேக் என்பவர் சென்னை முகப்பேர் பகுதியில் தங்கி பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மதுபோதையில் இருந்த இவர், அங்கு சாலையோரம் தங்கியிருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

தன்மானத்தைக் காத்துக்கொள்ள அந்தப் பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஷேக்கிடமிருந்து தப்பிக்கப் போராடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷேக், அந்தப் பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவும், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஷேக் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை மீட்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து வந்த ஜே.ஜே. நகர் காவல்துறையினர், இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த பெண்ணை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தலைமறைவாக இருந்த குற்றவாளி ஷேக்கை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்தனர். உயிரிழந்த பெண் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் தெரியவில்லை. போதை மற்றும் வக்கிர புத்தியால் ஒரு பெண்ணின் உயிர் பறிக்கப்பட்ட இந்த கொடூரச் சம்பவம் சென்னை மக்களிடையே மிகுந்த அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை இது தொடர்பாக மேலதிக விசாரணையைத் தொடர்ந்து வருகிறது.

Nanthini

Recent Posts

“விஜய்யின் வெற்றிக்கு ஸ்கெட்ச்?”… தளபதி போட்டியிடும் இடத்தில் ‘நோட்டா’?….. தேர்தல் ஆணையம் கொடுத்த அந்த நோட்டீஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…

3 minutes ago

“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…

8 minutes ago

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

14 minutes ago

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

22 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

24 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

24 minutes ago