உத்திர பிரதேசம் மாநிலம் ராம்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில மாதங்கள் கழித்து அந்த பெண்ணை அவரது கணவர் அடித்து துன்புறுத்தி உள்ளார். மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையே அந்த பெண்ணின் கணவர் தனது குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக மனைவியிடம் இருந்து பிரித்து அழைத்துச் சென்றார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது அந்த பெண்ணின் கணவரும் மாமனாரும் நீதிமன்றத்திற்கு வந்து வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டி தாக்கியுள்ளனர். இதனால் கோபமடைந்த பெண் தனது கணவரையும் மாமனாரையும் செருப்பால் துரத்தி துரத்தி அடித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…