ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்தநாளைக் விமரிசையாகக் கொண்டாடிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு கொண்டாட்டத்தின் போது, அவரது நண்பரான பவன் நாயர் என்பவர் விளையாட்டாக நீரஜின் முகத்தில் கேக்கை தடவியுள்ளார். இதனால் கடுமையாக ஆத்திரமடைந்த பர்த்டே பாய் நீரஜ், பவன் நாயருடன் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த மற்ற நண்பர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றும், ஆத்திரம் தணியாத நீரஜ் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் பவன் நாயரைச் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த பவன் நாயரை, நண்பர்கள் உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், அதிக ரத்தப்போக்கு காரணமாக அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார், பிறந்தநாள் கொண்டாடிய நீரஜ் மற்றும் அவரது தம்பி ரிஷுவை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…
மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டம் ம மதார்புரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான இஸ்மாயில் என்பவரை, அவரது வீட்டை…
டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள சிங்கல்பூர் கிராமத்தில், அனில் குப்தா என்பவர் தனது சொந்த வளர்ப்பு நாயை தினமும்…