மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டம் ம மதார்புரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான இஸ்மாயில் என்பவரை, அவரது வீட்டை விற்ற பணத்தைக் கைப்பற்றும் பேராசையில் மனைவியும், மைத்துனனும், சகோதரனும் இணைந்து கொடூரமாகப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டை விற்ற பணம் தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனைவியான முஸ்கான், மைத்துனன் ஷாகீர் மற்றும் இஸ்மாயிலின் சகோதரன் முகமது இஷாக் ஆகியோர் சேர்ந்து இஸ்மாயிலின் தலையில் தடியால் தாக்கி, பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றனர். கொலையை மறைப்பதற்காக உடலைக் கில்சிபுரா-நல்சா மாதா கோவில் சாலையில் உள்ள ஒதுக்குப்புறமான புதருக்குள் வீசியுள்ளனர். போலிஸாரைத் திசைதிருப்புவதற்காக இஸ்மாயிலின் சகோதரனே காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்த நாடகமும் நடத்தியுள்ளார்.
இருப்பினும், போலிஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை மிக தீவிரமாக ஆய்வு செய்தபோது இந்த கொடூரக் கொலையின் பின்னணி அம்பலமானது. உடனடியாக மனைவியையும் சகோதரனையும் கைது செய்த நை அபாதி போலிஸார், தலைமறைவாக உள்ள மைத்துனன் ஷாகீரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…
டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள சிங்கல்பூர் கிராமத்தில், அனில் குப்தா என்பவர் தனது சொந்த வளர்ப்பு நாயை தினமும்…