இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தை பாராட்டும் விதமாக தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
அதில் கூறியிருப்பதாவது, இளையராஜாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பொருட்டு அரசு நடத்திய விழாவில் மதுவுக்கு மிகப்பெரிய விளம்பரம் கொடுத்துள்ளனர். ஒரு மாநிலத்தின் முதல்வர் தனக்காக ஒரு விழா எடுக்கிறார். அதில் பெருமையாக பேசுவதை விட்டுவிட்டு ரஜினி “சொல்லிடவா சொல்லிடவா” என கேட்பதும் “கூறுங்கள் கூறுங்கள்” என இளையராஜா சொல்வதும் கொடுமை தான். ரஜினி மைக்கை பிடித்து இளையராஜாவின் மரியாதையை காற்றில் பறக்க விட்டார். நானும் மகேந்திரனும் மது அருந்தினோம்.
அங்கு வந்து இளையராஜாவிடம் நீங்களும் போடுகிறீர்களா என கேட்டேன். 3 மணி வரை பெரிய அலம்பல் ஆட்டம் ஆடினார். சினிமா நடிகையின் கிசுகிசுக்கள் பற்றி கேட்பார். அந்த பேச்சுக்கள் தான் அவருடைய பாட்டுகள் என ரஜினி கூறியுள்ளார். இதனால் இருவர் மீது மக்கள் வைத்திருந்த மரியாதையை அவர்களே தாழ்த்தி விட்டார்கள். மேடை நாகரிகம் என்று ஒன்று உள்ளது. அதை மறந்து அப்படி பேசியது சினிமா துறையில் உள்ளவர்களின் மீது மக்களுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…