திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவரது மனைவி ஷீலா. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அப்பகுதியில் இருக்கும் வெல்டிங் கடையில் சரண்ராஜ் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஷீலா பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார். நேற்று காலை சரண்ராஜ் ஷீலாவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சரண்ராஜ் கத்தியால் ஷீலாவின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார்.
பின்னர் அவர் இறந்து விட்டதாக நினைத்து அச்சத்தில் சரண்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே ஷீலாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரண்ராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனே நர்ஹே பகுதியில் உள்ள பூம்கர் பாலத்தில், அதிவேகமாக வந்த லாரி ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்ததால்…
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…