“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… அடர்ந்த காட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட கணவன்… போலீசையே அதிரவைத்த மனைவியின் ரகசியம் திட்டம் அம்பலம்….!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ததியா பகுதியில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த கணவனையே மனைவி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 6-ம் தேதி, சிந்த நதி பாலத்திற்கு அடியில் உள்ள புதர்களுக்குள் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. முதலில் அடையாளம் தெரியாத உடலாகக் கருதப்பட்டு போலீஸாரால் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், பின்னர் காணாமல் போன ஹன்ஸ்ராஜ் வர்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

பிரேதப் பரிசோதனையில் ஹன்ஸ்ராஜ் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், ஹன்ஸ்ராஜின் மனைவி பபிதா வர்மாவிற்கும், அவரது உறவினரான ஹேமந்த் ஆர்யாவிற்கும் இடையே முறையற்ற உறவு இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. தனது கணவர் மது அருந்திவிட்டுத் தன்னைத் துன்புறுத்துவதாகக் கூறி வந்த பபிதா, தனது காதலனுடன் சேர்ந்து அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.

இந்தச் சதித் திட்டத்தின்படி, கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ஹேமந்த் மற்றும் அவரது நண்பர் அனில் ஆகியோர் ஹன்ஸ்ராஜை மது அருந்த வருமாறு ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவர்கள் மறைத்து வைத்திருந்த மஃப்ளரால் ஹன்ஸ்ராஜின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு, சடலத்தைப் புதருக்குள் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கொலையை மறைத்துவிட்டு எதுவுமே தெரியாதது போல் பபிதா நாடகமாடி வந்துள்ளார்.

இறுதியாக, போலீஸார் செல்போன் அழைப்புத் தரவுகளை (CDR) ஆய்வு செய்தபோது, பபிதா மற்றும் ஹேமந்த் இடையே அடிக்கடி பேசப்பட்ட தகவல்கள் கிடைத்தன. இதன் மூலம் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து இருவரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். தற்போது கொலைக்கு மூளையாகச் செயல்பட்ட மனைவி பபிதா, அவரது காதலன் ஹேமந்த் மற்றும் கொலையில் உதவிய அனில் ஆகிய மூவரையும் ததியா போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

6 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

6 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

7 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

7 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

7 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

7 மணத்தியாலங்கள் ago