வீட்டுக்குள் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி… வீடியோவுடன் கையும் களவுமாக பிடித்த கணவன்.. கத்திக்குத்துக்கு பின் கண்ணீருடன் சொன்ன ரகசியம்..!!

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜா, தனது மனைவி அட்சயா பியூட்டி பார்லரில் வேலை பார்த்தபோது திருச்சியைச் சேர்ந்த ஜோஸ் என்பவருடன் ஏற்பட்ட தகாத உறவால் அவர் மீது கடுமையான சந்தேகத்தில் இருந்துள்ளார். அண்மையில், அட்சயா தனது கள்ளக்காதலனுடன் வீட்டில் தனியாக இருந்தபோது கணவர் ராஜா கையும் களவுமாகப் பிடித்து வாக்குவாதம் செய்யும் ஓராண்டுக்கு முந்தைய பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் திடீரென வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, “தன் குடும்பம் அழிந்துவிட்டதாகவும், மனைவியைக் கிழித்துப் போட்டுவிட்டு மகனுடன் சாகப் போவதாகவும், இதற்கெல்லாம் காரணமான ஜோஸுக்கு காவல்துறை தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என்றும் ராஜா அழுதுகொண்டே பேசிய மற்றொரு வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், பட்டுக்கோட்டை மயில்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த இந்தத் தம்பதியிடையே ஏற்பட்ட கடுமையான தகராறில், ஆத்திரமடைந்த ராஜா காய்கறி நறுக்கும் கத்தியால் மனைவி அட்சயாவின் வாய், கன்னம் மற்றும் உதட்டுப் பகுதிகளில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

பின்னர் மனைவியை வீட்டிற்குள் பூட்டிவிட்டுத் தனது 4 வயது மகனுடன் ராஜா தலைமறைவாகியுள்ளார். படுகாயமடைந்த அட்சயா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகரப் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து ராஜாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், படுகாயமடைந்த அட்சயா கல்லூரி காலத்திலிருந்தே நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்பதும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவாகச் சமூக வலைத்தளங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Muthu Mani

Recent Posts

செம டுவிஸ்ட்..! “காட்டிக்கொடுத்த அந்த ஒரு போட்டோ” 9 வயதில் பார்த்த மாப்பிள்ளை… 24 வயதில் கணவரான அதிசயம்… இணையத்தைக் கலக்கும் இந்தோனேசிய பெண்ணின் கதை..!!

இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…

8 மணத்தியாலங்கள் ago

“இனி 30 நாட்களில்” நில உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்… பட்டா மாறுதலில் அதிரடி மாற்றம்…!!

தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: சற்றுமுன் இவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வந்தது… உடனே செக் பண்ணுங்க..!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் ரசிகையாக இருந்த பாவத்திற்கு எனக்கு கிடைத்த தண்டனை.. “தெறி” படத்துல வருவது போல தண்டனை கொடுங்க… பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் பகீர் தகவல்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…

9 மணத்தியாலங்கள் ago

“தண்ணீர் தரலனா சீட்டை விட்டு இறங்கு!”.. அதிகாரியை நேருக்கு நேர் வெளுத்து வாங்கிய இளம் பெண்.. இந்தூரில் பரபரப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…

9 மணத்தியாலங்கள் ago

குதிரை பேர CM தானே நீங்க… ஆளுநர்கிட்ட மானத்தை அடகு வச்சிடீங்களே… திமுக ITWing கடும் விமர்சனம்..!!

திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago