“யார் நீ?” கதவைத் திறக்க முயன்ற இளைஞர்.. அலறிய மனைவி… விரட்டிப் பிடிக்க முயன்ற கணவர்.. சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்…!!!

Spread the love

கோவை மாவட்டம் பேரூர் ஆற்று வீதி பகுதியைச் சேர்ந்த கௌசல்யா என்பவர், கடந்த 29-ம் தேதி இரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வீட்டின் பின்பக்க கதவைத் திறந்து உள்ளே நுழைந்துள்ளார். அந்த நபர் படுக்கையறை கதவைத் திறக்க முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கௌசல்யா சத்தமிடவே, அவரது கணவர் அந்த மர்ம நபரைப் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த நபர் லாவகமாக காம்பவுண்ட் சுவரைத் தாண்டி தப்பியோடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, அதே நபர் அருகிலுள்ள மற்றொரு வீட்டிலும் திருட முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக கௌசல்யா அளித்த புகாரின் பேரில் பேரூர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை அடையாளம் கண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் காலம் என்பதால் பாதுகாப்புப் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மர்ம நபரைத் தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Muthu Mani

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

3 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

3 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

4 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

4 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

5 மணத்தியாலங்கள் ago