“உதவி செய்றேன்னு சொல்லி”… ஐதராபாத்தை அலறவிட்ட சைக்கோ கில்லர்… சொகுசு காரில் காத்திருந்த எமன்… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி…!

Spread the love

தெலுங்கானாவின் மிகவும் உயர்தரமான மற்றும் பாதுகாப்பான பகுதியாகக் கருதப்படும் ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸில், அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு மூதாட்டிகளின் மர்ம மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் 14-ஆம் தேதி மங்கம்மா என்ற மூதாட்டி கடைக்குச் சென்றபோது மாயமான நிலையில், அவரைத் தொடர்ந்து மார்ச் 19-ஆம் தேதி யதம்மா என்ற மற்றொரு மூதாட்டியும் காணாமல் போனார். இது குறித்து பிலிம் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, காணாமல் போன இரண்டு மூதாட்டிகளும் கடைசியாக ஒரே ஒரு சொகுசு காரில் ஏறிச் சென்றது உறுதியானது. அந்த காரின் பதிவு எண்ணைக் கொண்டு துப்பு துலக்கிய போலீசாருக்கு, அது ஒரு பிரபல மருத்துவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது கார் ஓட்டுநரான வாசு என்பவர் மீது சந்தேகம் வலுக்கவே, போலீசார் அவரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வாசு தெரிவித்த தகவல்கள் காவல்துறையினரையே அதிர வைத்தன. சூதாட்டத்திற்கு அடிமையான வாசு, பெரும் பண இழப்பைச் சந்தித்ததால் தனது தேவைகளைப் பூர்த்தி செய்யக் குறுக்கு வழியைத் தேடியுள்ளார். தனியாகச் செல்லும் முதியவர்களைக் குறிவைத்து, அவர்களுக்கு உதவி செய்வதாகக் கூறி காரில் ஏற்றிச் சென்று, ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அவர்களது நகைகளைத் திருடுவதை வாசு வழக்கமாக வைத்துள்ளார். மங்கம்மா மற்றும் யதம்மா ஆகிய இருவரையும் இதே பாணியில் கொலை செய்து, உடல்களைப் புறநகர் புதர்களில் வீசியதை அவர் ஒப்புக்கொண்டார்.

வாசு கொடுத்த தகவலின் அடிப்படையில் மூதாட்டிகளின் உடல்களை மீட்ட போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில் அவர் மேலும் பல மூதாட்டிகளை நோட்டமிட்டுப் பின்தொடர்ந்ததும் அம்பலமானது. செல்வந்தர்கள் வாழும் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில், ஒரு சைக்கோ கொலைகாரன் போலச் செயல்பட்ட ஓட்டுநர் பிடிபட்ட சம்பவம் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவர்கள் தனியாகச் செல்லும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Nanthini

Recent Posts

“திமுக கூட்டணி, எடப்பாடிக்கு அதிர்ச்சி, இப்போது 5 பேருக்கு ஆப்பு”…. தமிழக அரசியலை உலுக்கும் விஜய்யின் மூவ்….!

தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…

7 minutes ago

“அமைச்சர் பதவி காலி”…. திடீரென ராஜினாமா செய்த பாஜக மூத்த தலைவர் ஜார்ஜ் குரியன்…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…

18 minutes ago

பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…

27 minutes ago

திடீர் திருப்பம்…. “விஜய் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்.. கதறும் 4 மாஜி எம்.எல்.ஏ.க்கள்”… தவெக-வில் பெரும் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…

32 minutes ago

2017 டூ 2026: ‘அந்த’ புண்ணியவான்கள் செய்த தவறு… ஸ்டாலின், எடப்பாடிக்கு நேருக்கு நேர் சவால் விட்ட விஜய்…. சட்டமன்றத்தில் வெடித்த ‘பண்டோரா பாக்ஸ்’…!

தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…

42 minutes ago

“உங்க அப்பாவைக் காணோமே”…. திமுகவினர் இல்லாத அவையில் விஜய் சொன்ன அந்த ‘குட்டிக்கதை’… சட்டசபையில் வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ சர்ச்சை….!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…

53 minutes ago