ஈரான் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தூண்டுதலாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பகை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இதன் விளைவாக, டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, எஃப்-15இ (F-15E) ரகப் போர் விமானங்கள் மற்றும் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ என்ற பிரம்மாண்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பலை ஈரான் எல்லைக்கு அருகே நிலைநிறுத்தியுள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் வல்லமை கொண்ட இந்தப் படைகளின் நகர்வு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்களைச் சூழ வைத்துள்ளது.
மேலும், தனது நட்பு நாடான இஸ்ரேலைப் பாதுகாக்கும் வகையில் ஜோர்டான் மற்றும் கத்தார் போன்ற பகுதிகளில் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை அமெரிக்கா பலப்படுத்தியுள்ளது. டிரம்பிற்கு ஈரானிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், “ராணுவ நடவடிக்கைக்கான திட்டங்கள் தயாராக உள்ளன” என்று அவர் எச்சரித்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதால், இஸ்ரேலியப் படைகளும் தீவிர உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ள இந்த ராணுவக் குவிப்பு, எப்போது வேண்டுமானாலும் ஒரு பெரும் மோதலாக வெடிக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…