இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகருக்கு கொல்கத்தாவில் நடந்த விழாவில் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. கூரன் என்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருதை அவர் பெற்றுள்ளார். இதுகுறித்து இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது, நான் சினிமாவில் 45 ஆண்டுகளாக தயாரிப்பாளர், இயக்குனராக உள்ளேன். இப்போது நடிகராகவும் இருக்கிறேன். சினிமாவில் நான் ஓய்வெடுக்க நினைத்தாலும் அது முடிவதில்லை. சினிமா ஒரு காற்றைப் போன்றது. எப்போதும் அதை நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் நடித்த படங்களில் கூரன் என்ற படத்தில் நடித்தது, அதிலும் ஒரு நாயுடன் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அது ஒரு நாய்க்கும் மனிதனுக்கும் உள்ள பாசம் சம்பந்தப்பட்ட கதை. கூரன் படத்தில் நடித்ததற்காக எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பீப்பில் பார் அனிமல்ஸ் அமைப்பினர் இணைந்து இந்த விருதை எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.
கொல்கத்தாவில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் எனக்கு இந்த விருதை வழங்கினார்கள். நான் என் மனைவியோடு வந்து மகிழ்ச்சியோடு அந்த விழாவில் கலந்துகொண்டு விருதை பெற்றுக் கொண்டேன். சினிமாவில் நம்பிக்கையோடு அர்ப்பணிப்போடு உழைப்பை வழங்கினால் அது பெருமையான அங்கீகாரத்தை தேடித் தரும் என்று எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார். நடிகர் விஜய் 68 படங்களில் நடித்தும் இதுபோன்ற சிறந்த நடிகர் விருதுகளை அவர் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…