நடிகர் விஜய்க்கு கிடைக்கலே… அவர் அப்பாவுக்கு கிடைச்சது – கொல்கத்தாவில் விருது பெற்ற இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்!

By Elango on மார்கழி 24, 2025

Spread the love

இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகருக்கு கொல்கத்தாவில் நடந்த விழாவில் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. கூரன் என்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருதை அவர் பெற்றுள்ளார். இதுகுறித்து இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது, நான் சினிமாவில் 45 ஆண்டுகளாக தயாரிப்பாளர், இயக்குனராக உள்ளேன். இப்போது நடிகராகவும் இருக்கிறேன். சினிமாவில் நான் ஓய்வெடுக்க நினைத்தாலும் அது முடிவதில்லை. சினிமா ஒரு காற்றைப் போன்றது. எப்போதும் அதை நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் நடித்த படங்களில் கூரன் என்ற படத்தில் நடித்தது, அதிலும் ஒரு நாயுடன் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அது ஒரு நாய்க்கும் மனிதனுக்கும் உள்ள பாசம் சம்பந்தப்பட்ட கதை. கூரன் படத்தில் நடித்ததற்காக எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பீப்பில் பார் அனிமல்ஸ் அமைப்பினர் இணைந்து இந்த விருதை எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.

   

கொல்கத்தாவில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் எனக்கு இந்த விருதை வழங்கினார்கள். நான் என் மனைவியோடு வந்து மகிழ்ச்சியோடு அந்த விழாவில் கலந்துகொண்டு விருதை பெற்றுக் கொண்டேன். சினிமாவில் நம்பிக்கையோடு அர்ப்பணிப்போடு உழைப்பை வழங்கினால் அது பெருமையான அங்கீகாரத்தை தேடித் தரும் என்று எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார். நடிகர் விஜய் 68 படங்களில் நடித்தும் இதுபோன்ற சிறந்த நடிகர் விருதுகளை அவர் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.