Connect with us

CINEMA

நடிகர் விஜயிடம் உதவிக்கேட்டு சென்ற பிரேமலதா – ஒரு வருடமாக மவுனம் காத்த விஜய், கேப்டன் கனவை நிறைவேற்ற தவறிட்டாரே?

நடிகர் விஜயகாந்த் கடந்த வாரத்தில் 28ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பின் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த கேப்டன் உடலுக்கு, நடிகர் விஜய் நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். விஜய் நடிக்க வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் செந்தூரப்பாண்டி படத்தில், தனது தம்பியாக விஜயை, கேப்டன் நடிக்க வைத்து அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தினார். ஆனால், உடல் நலமின்றி இருந்த விஜயகாந்தை, விஜய் ஒருமுறை கூட வந்து நேரில் பார்க்கவில்லை என்பது கேப்டன் ரசிகர்களின் குமுறலாக இருந்தது.

   

ஆனால் ஓராண்டுக்கு மேலாக கேப்டனை நேரில் வந்து பார்த்து, நலம் விசாரிக்க நடிகர் விஜய் பலமுறை அனுமதி கேட்டதாகவும், பிரமேலதா அதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. சத்யராஜ் போன்றவர்கள் விஜயகாந்தை அடிக்கடி நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில், விஜய்க்கு அனுமதி கிடைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், சகாப்தம் படம் ஆடியோ லாஞ்ச் விழாவில் கலந்துக்கொள்ளுமாறு, விஜய் வீட்டுக்கு நேரில் சென்று விஜயகாந்த், பிரமேலதா அழைத்தும் விஜய், அந்த விழாவில் கலந்துக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

இப்போது மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது சினிமாத்துறையில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு பெரிய வரவேற்பு இல்லை. அதனால் விஜய் படத்தில் ஏதேனும் ஒரு முக்கிய ரோலில் நடித்தால், அது அவருக்கு நல்ல வரவேற்பை, அறிமுகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தும் என பிரேமலதா கருதியுள்ளார். விஜயகாந்த் நோய்வாய்பட்ட காலத்தில், பிரேமலதாவே இதுகுறித்து விஜயிடம் பேசியும் இருக்கிறார்.

இதில் ஏதேனும் பிரச்னை என்றால் இயக்குநர், தயாரிப்பாளருடன் நாங்களே வருகிறோம். நீங்கள் அந்த படத்தில் நடித்தால் மட்டும் போதும் என்றும் கூறியிருக்கிறார். இதுபற்றி சீக்கிரம் சொல்கிறேன் என்று சொன்ன விஜய், ஒரு வருடமாகியும் எந்த பதிலும் சொல்லாமல் இருந்துவிட்டார். தனது மகன் நடிப்பில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவு கேப்டனுக்கு இருந்துள்ளது. ஆனால், அந்த கனவை நிறைவேற்ற நடிகர் விஜய் உதவ முன்வரவில்லை என்பதே கசப்பான உண்மை.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top