மீண்டும் ஒரு மரணம்…! அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய விஜய்… தொண்டர்களின் உயிரை விட அரசியல் முக்கியமா..? கிளம்பிய சர்ச்சை..!!

Spread the love

கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் வடு மறைவதற்குள்ளேயே, சேலத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த சூரஜ் (37) என்பவர் வெயில் மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கரூரில் நிகழ்ந்த உயிரிழப்புகளின் போது, அக்கட்சியின் தலைவர் விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்ற விமர்சனம் நிலவி வருகிறது. தற்போது சேலத்திலும் ஒரு உயிரிழப்பு நிகழ்ந்துள்ள நிலையில், தவெக-வின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தொண்டர்களின் நலன் குறித்த கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரத்தில் அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் விஜய்யின் மௌனத்தைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். “தொண்டர்களின் உயிரை விட அரசியல் முக்கியமா?” என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று வருத்தம் தெரிவிக்காதது ஒரு தலைவருக்கு அழகல்ல என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சேலம் உயிரிழப்பு குறித்து விஜய் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான இரங்கலோ அல்லது நேரடிச் சந்திப்போ நிகழாதது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தவெக-வின் மக்கள் தொடர்பு மற்றும் பொறுப்புணர்வு மீதான எதிர்மறை விவாதங்களை உருவாக்கியுள்ளது.
Soundarya

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

3 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago