“சார்… பேட்டரி சார்ஜ் செய்ய காசு இல்ல” கையேந்தி பிச்சை எடுக்கும் ரோபோ… சீனத் தெருக்களில் நடந்த பகீர் கூத்து..!!

Spread the love

சீனாவின் சிச்சுவான் மாகாணத் தெருக்களில் மனிதனைப் போன்ற தோற்றம் கொண்ட ‘ஹியூமனாய்டு’ ரோபோ ஒன்று மண்டியிட்டு, கைகளைக் கூப்பி பிச்சை எடுக்கும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘யுனிட்ரீ ஜி1’ என்ற அதிநவீன ரோபோதான் இவ்வாறு பொதுவெளியில் மண்டியிட்டு பிச்சை எடுத்துள்ளது. அதன் அருகில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கி மற்றும் எல்.இ.டி திரையில், “பேட்டரியை ரீசார்ஜ் செய்யப் பணமில்லை, கரண்ட் பில் கட்ட உதவுங்கள்” என்ற மெசேஜ் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு பெயர்போன சீனாவில், இந்த ரோபோவின் அருகில் காசுகளைப் போடுவதற்கான தட்டு மட்டுமன்றி, ஆன்லைனில் பணம் அனுப்புவதற்காக ‘க்யூஆர் கோடு’ ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது. தெருவில் செல்பவர்கள் பலரும் இந்த விசித்திரக் காட்சியை ஆச்சரியத்துடன் பார்த்து, தங்கள் மொபைல் மூலம் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பிச்சை போடும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. பெய்ஜிங், செங்டு போன்ற பல முக்கிய நகரங்களிலும் இது போன்ற ‘ரோபோ பிச்சைக்காரர்கள்’ உலா வரத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தொழில்நுட்பக் கூத்து இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நெட்டிசன்கள் பலரும், “ஏற்கனவே கார்ப்பரேட் வேலைகளைப் பறித்த ஏஐ , இப்போது பிச்சைக்காரர்களின் வேலையையும் பறிக்கத் தொடங்கிவிட்டதா?” என நகைச்சுவையாகவும் கவலையோடும் கமெண்ட் செய்து வருகின்றனர். எனினும், இது நிஜமாகவே பிச்சை எடுப்பதற்காக நடத்தப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் ஒரு புத்திசாலித்தனமான விளம்பர உத்தி அல்லது நவீன கலை நிகழ்ச்சி என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Soundarya

Recent Posts

“வேலை மட்டுமே வாழ்க்கை அல்ல…” பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய பெண் பேராசிரியர்… ஐஐடி மும்பையில் அரங்கேறிய அசத்தல் நிகழ்வு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ருசி ஆனந்த், தனது துறையின் கலாச்சார…

6 minutes ago

“சௌமியா மேடம் கொஞ்சம் தர்மபுரியை விட்டு வெளியே வாங்க…” அமைச்சரின் கலகல பேச்சு… சட்டப்பேரவையில் எழுந்த அதிரடி சிரிப்பலை…!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தர்மபுரி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.…

14 minutes ago

“அன்பாக வளர்த்த செல்ல கழுதையை சுட்டுக்கொன்ற கொடூரம்…” அமெரிக்காவில் போலீசார் செய்த காரியம்.. நிதி திரட்டும் தளத்தில் ரூ.30 லட்சத்திற்கு மேல் குவிந்த உதவி… அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ராக்மார்ட் பகுதியில் ஹன்னா இஸ்ரேல் என்பவரது குடும்பத்தினர் 'ஹீ-ஹா' என்ற குட்டி ஆண் கழுதையைத்…

24 minutes ago

“என் பிள்ளையை பாருங்க… ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க…” ஆக்சிஜன் மாஸ்க்குடன் நின்ற தந்தை… நோயுடன் தவித்த பிஞ்சு குழந்தை… கதறும் தாய்… ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் இடநெருக்கடி காரணமாகப் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர் மருத்துவமனைக்கு…

36 minutes ago

சண்டை தான் வரும்…! “தெரு நாய்களுக்கு உணவு அளித்தால் ரூ.5,000 அபராதம்…” மீரா பயந்தர் மாநகராட்சியின் உத்தரவுக்கு எதிர்ப்பு…!

மும்பை அருகே உள்ள மீரா பயந்தர் மாநகராட்சி , குறிப்பிட்ட 20 இடங்களைத் தவிர்த்துப் பிற பொது இடங்களில் தெரு…

56 minutes ago

மனித குலத்திற்கு மிகபெரிய எச்சரிக்கை…! நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,050 ஆக உயர்வு… 4,000 பேரை காணவில்லை… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம்…

1 மணத்தியாலம் ago