“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

Spread the love

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள இரயில்வே விசாரணை மையத்தில் பணிபுரியும் எழுத்தர் ஒருவர், தனக்கு முன்னால் மைக் இருக்கும் போதே நாற்காலியில் அமர்ந்து கொண்டு நிம்மதியாக தூங்குகிறார். ஆனால், மறுபுறம் இரயில்களின் வருகை மற்றும் தளம் குறித்த விவரங்களை அறிய ஏராளமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். பயணிகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அந்த ஊழியர் தூங்கும் காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பயனர் ஒருவர், “இந்த ஊழியரை இரயில்வே நிர்வாகம் பணிநீக்கம் செய்யும் வரை இந்த வீடியோவை தொடர்ந்து பகிருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் இரயில்வே ஊழியர்களின் இத்தகைய அலட்சியப் போக்கைக் கண்டித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசு வேலை என்றால் நிம்மதியாக தூங்கி சம்பளம் வாங்கலாம் என்ற எண்ணத்தில் தான் மக்கள் அலைகிறார்கள் என்றும் சிலர் விமர்சித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாகி மக்களின் எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, இந்திய இரயில்வேயின் குறைதீர்க்கும் முகமையான ‘இரயில்வே சேவா’ இதற்கு உடனடியாகப் பதிலளித்துள்ளது. இந்த விவகாரத்தை இரயில்வே நிர்வாகம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், அந்த ஊழியர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Swetha

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

45 minutes ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

48 minutes ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

58 minutes ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

1 மணத்தியாலம் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

2 மணத்தியாலங்கள் ago

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

2 மணத்தியாலங்கள் ago