ஹர்தோய் மாவட்டத்தின் கோட்வாலி நகரில் அமைந்துள்ள ஆர் ஆர் இன்டர் கல்லூரியில் நடந்த 11-ம் வகுப்பு மாணவர் தாக்குதல் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மதிய உணவு நேரத்தில் நடந்துள்ளது. இன்னும் சில நிமிடங்கள் இருந்த போதிலும் மாணவன் மற்றொரு வகுப்பில் அமர்ந்திருந்தார். ஆசிரியர் வருவதை அறிந்து மாணவன் வேறு வழியாக வெளியேற முயன்றுள்ளார். இதனைக் கண்ட ஆசிரியர் மாணவனை தடுத்து நிறுத்தி கைகளால் தாக்கியுள்ளார். மனோஜ் குமார், சுரேந்திர பாண்டே மற்றும் அரவிந்த் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் மற்றும் இன்னும் இரண்டு நபர்கள் மாணவனை முதல்வரின் அறைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில் மாணவனை கழுத்தில் மிதித்து கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மாணவன் போலீசில் புகார் அளித்தால் எதிர்காலம் பாழாகும் என்று அவர்கள் மிரட்டி உள்ளனர். மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த மூன்று ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். கல்வியின் நிறுவனத்தில் மாணவனிடம் நடந்த இந்த கொடூர தாக்குதல் மாணவர் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி தற்போது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…
தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…
ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…