தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள் தகுந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். கடைகளில் விற்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களைத் தவிர்த்து, இளநீர், மோர் போன்ற இயற்கை பானங்களை குழந்தைகளுக்கு அளிப்பது சிறந்தது. இளநீரில் உள்ள தாதுக்கள் நீர்ச்சத்தை சமன்படுத்தும்; அதேபோல் மோரில் சீரகம் சேர்த்து வழங்குவது செரிமானத்திற்கும் உடல் குளிர்ச்சிக்கும் பெரிதும் உதவும். சர்க்கரை சேர்க்காத தர்பூசணி மற்றும் எலுமிச்சை சாறுகள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்த மிகக் குளிர்ந்த நீரை நேரடியாகக் கொடுப்பது குழந்தைகளுக்குத் தொண்டை வலி மற்றும் சளியை உண்டாக்கும் என்பதால், அதற்கு மாற்றாக மண்பானை நீரைப் பயன்படுத்துவது நலம் தரும். அதிக குளிர்ச்சியான பானங்கள் நுரையீரலில் உள்ள ‘சிலியா’ உறுப்புகளின் செயல்பாட்டை மந்தமாக்கி, கிருமிகளை வெளியேற்றுவதில் தடையை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், கார்போனேட்டட் பானங்களில் உள்ள வேதிப்பொருட்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால் அவற்றைத் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். கோடை காலத்தில் பாரம்பரிய உணவு முறைகளே குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…