தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.
தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.
கடந்த சில ஆண்டுகளாக விஜய் தனது சினிமா கேரியரின் உச்சத்தில் இருக்கிறார் என்றும் அவரின் தோல்விப் படங்கள் மிகச்சிறப்பாக கலெக்ஷன் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின. அப்படி அவர் நடிப்பில் மோசமான விமர்சனங்களைப் பெற்ற வாரிசு படமே 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக அப்போது புள்ளி விவரங்கள் வெளியாகின. ஆனால் இவையாவும் ஊதிப் பெருக்கப்பட்டவை என அப்போதே விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சம்மந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் “வருமான வரித்துறை அதிகாரிகளிடம் வாரிசு படத்தின் வசூல் 120 கோடி ரூபாய்தான் என்றும் விஜய்யின் சம்பளம் 40 கோடி ரூபாய்தான்” என்றும் தில் ராஜு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படம் ரிலீஸான போது 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எது உண்மை என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…