சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் முத்து குடும்பத்துடன் மலேசியா போக வேண்டும் என்ற திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று வித்யாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார் ரோகிணி. மலேசியா மாமா போல் நடிக்கும் நபரை வரவைத்து புதிய பிளான் போடுகிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் ஒரு தவறை மறைக்க மேலும் மேலும் தவறு செய்து கொண்டிருக்கிறார் ரோகிணி. முத்துவின் திட்டத்தை உடைக்க இவர் புதிய திட்டம் செய்து மலேசியா மாமாவை வீட்டில் வந்து நடிக்க சொல்லும்படி கூறுகிறார். அதே போல் வீட்டில் அனைவரும் இருக்கும் போது மலேசியா மாமா வந்து ரோகினி உன் அப்பாவோட தொழில் எதிரிகள் வந்து அவர் வெளியே வரக்கூடாது அப்படின்னு ஜெயில்லையே வச்சு கொன்னுட்டாங்க என்று சொல்கிறார். உடனே வீட்டிலிருந்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ரோகிணி விழுந்து புரண்டு மயக்கம் அடைவது போல் நன்றாக பர்ஃபார்ம் செய்து ஏமாற்றி விடுகிறார். ஆனால் முத்து மட்டும் ஒரு ஓரமாக சந்தேக கண்னோடு பார்த்துக் கொண்டே இருக்கிறார். விஜயா அண்ணாமலை எல்லாரும் ரோஹிணிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நம்ம மலேசியா ட்ரிப் போக வேண்டாம் என்று முத்துவிடம் கூறி விடுகின்றனர். அடுத்ததாக ரோகிணி ஒரு கனவு காண்கிறார். அதில் வித்யா வீட்டில் மலேசியா மாமா வித்யா ரோகினி மூணு பேரும் பேசிக் கொண்டிருப்பதை மீனா கேட்டதாகவும் பிறகு ரோகிணிக்கும் மீனாவுக்கும் பெரிய பிரச்சனையாவது போலவும் கனவு கண்டு கத்துகிறார். உடனே மனோஜ் என்ன உனக்கு வாரம் வாரம் ஒரு கெட்ட கனவு வருமா இரு நான் எதுக்கும் போயி செருப்பு எடுத்துட்டு வந்து பக்கதுல வச்சிக்கிறேன் உங்க அப்பாவோட ஆவி இங்க வந்துருச்சுன்னா என்று அவர் ஒரு பக்கம் காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்.
பிறகு வித்யா ரோஹிணிக்கு போன் செய்து என்ன மலேசியா மாமா நல்லா நடிச்சாரா நீ ஒன்னும் மாட்டிக்கலையே ஒன்னும் பிரச்சனை இல்லையே என்று கேட்கிறார். ஆமா ஒன்னும் பிரச்சனை இல்ல நான் எப்படியோ தப்பிச்சுட்டேன் என்று கூறுகிறார். அதற்கு அடுத்ததாக முத்துவும் மீனாவும் இரவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பார்லர் அம்மா ஏதோ ஒன்னு தப்பு பண்ணிக்கிட்டே இருக்கு அந்த தப்பை மறைக்க மேலும் மேலும் தப்பு பண்ணுது அதை கச்சிதமா மாட்டாத அளவுக்கு பண்ணிடுது என்று கூறுகிறார்.
உடனே மீனா என்னங்க நீங்க எதுக்கெடுத்தாலும் சந்தேக கண்ணோடே இப்படி பாக்குறீங்க யாராவது பெத்த அப்பாவை செத்துட்டாங்கன்னு சொல்லுவாங்களா நீங்க அப்படி நினைக்காதீங்க என்று மீனா கூறுகிறார். இல்ல மீனா அப்படி இல்ல இவ்வளவு நாள் இல்லாத அப்பா இப்ப எப்படி செத்துப்போனார் திடீர்னு நம்ம மலேசியா போகணும்னு சொல்லும்போது இப்படி எல்லாம் நடக்கணுமா ஏதோ ஒரு மர்மம் இருக்கு கண்டுபிடிக்கணும் என்று சொல்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…