தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என தொடர்ந்து பிஸியாக நடிகை தமன்னா கலக்கி வருகின்றார். கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அனிருத் இசையில் வெளியான காவாலா பாடல் இவருக்கு மிகப்பெரிய வெற்றி பாடலாக மாறியது. இந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து 100 கோடி ரூபாய் வசூல் செய்ய காரணமாக மாறியவர் தமன்னா தான்.
தமன்னா தற்போது odela 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த வருடம் வெளிவந்த அரண்மனை 4 படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். கிட்டத்தட்ட 18 வருடத்திற்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார். இவர் படங்கள் மட்டுமல்லாமல் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவருடைய நடனம் சமீபகாலமாகவே இணையத்தில் வெளியாகிய ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஜெயிலர் படத்தில் காவலா பாடலில் தொடங்கி ஸ்ட்ரீ 2 படம் வரை அவருடைய நடனத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இந்த நிலையில் இவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நடிகர் ரவீனா டாண்டனின் மகளும் 19 வயதான இளம் நடிகை ராஷா ததானி சட்டென்று தமன்னாவை ஆன்ட்டி என்று அழைக்க அதற்கு பட்டென்று அவர் ராஷா ததானி தோல் மீது லேசான அடிபோட்டு ஆண்டி எல்லாம் சொல்லக்கூடாது என்று செல்லமாக கண்டித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…