உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மஹால்… அதைப்பற்றி பலர் அறியாத ஆச்சர்யமூட்டும் தகவல்கள்…

Spread the love

தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றும் இந்தியாவில் உள்ள நினைவு சின்னங்களில் முக்கியமானதாகும். இது டெல்லி ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாகவும் உலக புகழ்பெற்றிருக்கிறது. இந்த தாஜ்மஹால் முகலாய மன்னர் ஷாஜகான் தனது இறந்து போன காதல் மனைவியான மும்தாஜ் நினைவாக 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த தாஜ்மஹால் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமான தகவல்களை இனி பார்ப்போம்.

உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் அற்புதங்களில் ஒன்றாக தாஜ்மஹால் இருக்கிறது. மனிதன் படைத்ததில் பிரம்மாண்டமாக திகழ்கிறது தாஜ்மஹால். இஸ்லாம், பாரசீகம் மற்றும் இந்திய கட்டிடக்கலையின் கலவையில் உருவாகி இருக்கிறது தாஜ்மஹால். இந்த தாஜ்மஹாலை கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. 20000 தொழிலாளர்கள் இந்த தாஜ்மஹாலை கட்ட பணியாற்றி இருக்கிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.

ஷாஜகான் தனது அன்புக்குரிய மனைவி மும்தாஜூக்காக தாஜ்மஹால் கட்டியிருக்கிறார். வரலாற்றுப்படி ஷாஜகானின் மூன்றாவது மனைவி தான் மும்தாஜ். அவரது இயற்பெயர் அர்ஜுமன்த் பானு பேகம் என்பதாகும். ஷாஜகானின் 14 வது குழந்தையை பெற்றெடுக்கும் போது உடல்நிலை சரியில்லாமல் மும்தாஜ் இறந்து போயிருக்கிறார்.

20000 தொழிலாளர்கள் மட்டுமல்ல ஆயிரம் யானைகளை வைத்து தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் இருந்து வந்த பளிங்கு கற்களை ஏந்திக்கொண்டு யமுனை ஆற்றங்கரையில் இறக்குவது தான் யானைகளின் பணியாக இருந்திருக்கிறது. பளிங்கு கற்களை வைத்து தாஜ்மஹால் கட்டப்பட்டாலும் அலங்கார வடிவமைப்பிற்காக விலைமதிப்பற்ற கற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காலை, நண்பகல், இரவு என எந்த கால நிலையிலும் தாஜ்மஹால் பல வண்ணங்களில் மின்னும் தன்மை கொண்டதாக இருக்கிறது. தாஜ்மஹாலின் உள்ளுக்குள்ளே இஸ்லாம் மக்களின் புனித நூலான குரானின் வசனங்கள் பல இடங்களில் எழுதப்பட்டிருக்கும்.

தாஜ்மஹாலுக்கு மும்தாஜ் மஹால் என்றும் ஒரு பெயர் உள்ளது. இங்குள்ள மும்தாஜ் கல்லறையில் அல்லாஹ்வின் 99 பெயர்கள் சித்திர கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலை கட்டுவதற்கான கட்டிட பொருட்கள் பஞ்சாப், ராஜஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, சீனா, திபெத், அரேபியா என பல்வேறு நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

வெள்ளை பளிங்கு கற்களால் ஆன தாஜ்மஹாலை போலவே ஷாஜகான் கருப்பு பளிங்கு கற்களை வைத்து மற்றொரு தாஜ்மஹாலை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் போர் அதிகரித்ததன் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டு இருக்கிறார். கட்டிடக்கலையில் மட்டும் தாஜ் மஹால் அதிசயம் அல்ல அது வெளிச்சத்துக்கு தகுந்த மாதிரி தனது நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு டையில் கட்டி முடிக்கப்பட்டு இன்றளவும் அசையா ஆச்சரியமாக நின்று கொண்டிருக்கிறது. இதில் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் ஷாஜகான் யாருக்காக ஆசையாய் தாஜ்மஹால் கட்டினாரோ அந்த மும்தாஜே இந்த கட்டிடத்தை பார்க்கவில்லை. அவர் இறந்த பிறகு தான் ஷாஜகான் தாஜ்மஹாலை காட்டியிருக்கிறார்.

admin

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

7 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

7 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

7 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

7 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

7 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

7 மணத்தியாலங்கள் ago