கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தேர்தல் பிரச்சாரம் நடத்தாமல் இருந்த விஜய் தற்போது மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதே சமயம் சமீபத்தில் கூட விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலுக்குள் தமிழக வெற்றிக்கழகம் தொண்டர்கள் செய்த அலப்பறை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் கோவில் வளாகத்திற்குள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழக வெற்றிக்கழகம் தொண்டர்கள் சிலர் தளபதி விஜய்க்கு அரோகரா, தமிழக வெற்றி கழகத்திற்கு அரோகரா என்ற கோஷம் எழுப்புகிறார்கள். அதோடு அடுத்த வருடம் அறநிலையத்துறை டேக் ஓவர் செய்து பாஸ் வழங்குவோம், இந்த மாதிரி வரிசையில் நிற்க அவசியமில்லை என்று கூறி விஜயின் போட்டோவை காட்டி பக்தர்களிடம் வாக்குகளும் சேகரித்துள்ளன. இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோவில் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…