“மேடையில் ‘த்ரிஷா’ என கூச்சலிட்ட தொண்டர்கள்”… சிரிக்காமல் உதயநிதி சொன்ன ‘அந்த’ வார்த்தை….. கொந்தளித்த தவெக… வெடித்தது சர்ச்சை….!

Spread the love

தஞ்சாவூரில் காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் குடிநீர் பிரச்சனை தீவிரமடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் விஜய் அமைதி காப்பதாகவும், எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகள் போடுவதிலேயே கவனம் செலுத்துவதாகவும் கடுமையாகச் சாடினார்.

உதயநிதி ஸ்டாலின் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த சில திமுக தொண்டர்கள் திடீரென நடிகை ‘த்ரிஷா’வின் பெயரைச் சொல்லி கூச்சலிட்டனர். இதைக் கேட்டு மேடையில் சிரித்த உதயநிதி ஸ்டாலின், “எங்கு தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கு தண்ணீர் வர வேண்டும்” எனக் கூறி, பின்னர் தான் காவிரியைப் பற்றிக் குறிப்பிட்டதாகச் சமாளித்தார். இந்தச் சம்பவத்தின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பொதுவெளியில் விமர்சித்து வரும் நிலையில், மேடையில் தொண்டர்கள் கூச்சலிட்டதைக் கண்டிக்காமல் உதயநிதி நகைச்சுவையாகப் பேசியதற்கு தவெகவினரும் விஜய் ஆதரவாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். TASMAC ஊழல், மின்சாரக் கட்டண உயர்வு, உள்ளாட்சி நிர்வாக முடக்கம் போன்ற மக்கள் சார்ந்த முக்கிய நிர்வாகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல், தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Nanthini

Recent Posts

ஐயோ… யாரையும் தப்பா பேசல… அஞ்சவும் மாட்டேன்… செங்கிப்பட்டி விசாரணைக்கு பின்… உதயநிதி ஆவேச பேட்டி… பதறும் அரசியல் களம்…!

தஞ்சாவூரில் விவசாயிகள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் தான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு தவறாகப் பேசவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…

17 seconds ago

உங்க கிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்… அரசு மிக முக்கிய அறிவிப்பு…!

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் வரும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா…

9 minutes ago

“அட கொடுமையே… அனாதைன்னு நம்பி பொண்ணு கொடுத்த குடும்பம்… கணவரின் போனை பார்த்த… மனைவிக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி… அம்பலமான போலி பின்னணி…!”

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம், துப்ரான் மண்டலத்தைச் சேர்ந்த மன்னே (60) என்பவரின் மனைவி சுஜாதா, தன் கணவரின் செல்போனில்…

16 minutes ago

ஐயோ பாவம்… தெருவில் நடந்த சிறுமி மீது சாய்ந்த மின்கம்பம்… நொடியில் பறிபோன உயிர்… உ.பி -யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டம் பஹ்வான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகினி சுக்லா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு…

30 minutes ago

ஷாக்… உதயநிதி நாளை சட்டசபை வரக்கூடாது?… CM விஜய் மேஜைக்கு வந்த… ரகசிய உளவுத்துறை ரிப்போர்ட்… பின்னணி என்ன?…

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யின் நிர்வாகத்தை விமர்த்துப்…

9 மணத்தியாலங்கள் ago

அடேங்கப்பா…. அன்று கோவையில் பிரியாணி… இன்று டோக்கியோவில் மிச்செலின்… ஒரே ஒரு தட்டு பிரியாணி செய்த ‘மாஸ்’ சம்பவம்…!

ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான தகமாசா ஒசாவா என்பவர் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் சுவைத்த பிரியாணி அவரது…

9 மணத்தியாலங்கள் ago