“மேடையில் ‘த்ரிஷா’ என கூச்சலிட்ட தொண்டர்கள்”… சிரிக்காமல் உதயநிதி சொன்ன ‘அந்த’ வார்த்தை….. கொந்தளித்த தவெக… வெடித்தது சர்ச்சை….!

By Nanthini on ஆவணி 4, 2026

Spread the love

தஞ்சாவூரில் காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் குடிநீர் பிரச்சனை தீவிரமடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் விஜய் அமைதி காப்பதாகவும், எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகள் போடுவதிலேயே கவனம் செலுத்துவதாகவும் கடுமையாகச் சாடினார்.

உதயநிதி ஸ்டாலின் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த சில திமுக தொண்டர்கள் திடீரென நடிகை ‘த்ரிஷா’வின் பெயரைச் சொல்லி கூச்சலிட்டனர். இதைக் கேட்டு மேடையில் சிரித்த உதயநிதி ஸ்டாலின், “எங்கு தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கு தண்ணீர் வர வேண்டும்” எனக் கூறி, பின்னர் தான் காவிரியைப் பற்றிக் குறிப்பிட்டதாகச் சமாளித்தார். இந்தச் சம்பவத்தின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

   

முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பொதுவெளியில் விமர்சித்து வரும் நிலையில், மேடையில் தொண்டர்கள் கூச்சலிட்டதைக் கண்டிக்காமல் உதயநிதி நகைச்சுவையாகப் பேசியதற்கு தவெகவினரும் விஜய் ஆதரவாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். TASMAC ஊழல், மின்சாரக் கட்டண உயர்வு, உள்ளாட்சி நிர்வாக முடக்கம் போன்ற மக்கள் சார்ந்த முக்கிய நிர்வாகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல், தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.