தமிழக அரசு பல்வேறு விதமான கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. சொந்த தொழில் செய்வதற்கு நிதி உதவி வழங்கும் வகையில் ஏராளமான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதன்படி தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக 7 லட்சம் ரூபாய் முதல் 11 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கும் வகையில் தமிழக அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறைக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக சொந்தமாக தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக உயர நினைப்பவர்களுக்காக அரசு கடன் திட்டங்களை உருவாக்கியுள்ளது.
அதன்படி மீன் மற்றும் இறால் வளர்ப்பு மூலமாக தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு தமிழக அரசு சுமார் 7 லட்சம் முதல் 11 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குகின்றது. பண்ணை அமைத்து மீன் மற்றும் இறால் வளர்ப்பது மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். மீன் மற்றும் இறால் விரும்பி களுக்காக பல்வேறு விதமான உணவு வகைகள் செய்யப்படுகின்றது. அதற்காக அதிக அளவில் மீன் மற்றும் இறால் தேவைப்படுகிறது. மற்றொரு பக்கம் மீன் மற்றும் இறாலை வாங்க வார இறுதி நாட்களில் சந்தைகளில் மக்கள் கூட்டமும் வருகிறது.
இப்படியான நிலையில் தமிழக அரசின் மீன்வளத்துறை மீன் மற்றும் இறால் வளர்ப்புக்காக மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தனியாக இறால் பண்ணை அமைத்து தொழில் முனைவோர்களாக விரும்புவர்களுக்கு இந்த திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. பயோ பிளாக் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறால் வளர்ப்பதன் மூலமாக குறைந்த அளவில் நீரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தப் பண்ணை அமைப்பதற்கு மொத்தமாக 18 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதில் ஒரு பகுதி அரசு சார்பில் மானியமாக வழங்கப்படும். பயோ பிளாக் தொழில்நுட்பம் மூலமாக இறால் பண்ணை அமைப்பவர்கள் இந்த மானியத்தை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் நல்ல வருமானமும் ஈட்ட முடியும். மீன்வளத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு இறால் பண்ணை அமைக்க விரும்புபவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக மானியம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல்-அப்பாஸி என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி ஊழல் தடுப்பு சோதனையில், தங்க…
தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைத் கவிழ்க்கும் நோக்கில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்களிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் அனல் பறந்து…
தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சுய தொழில் தொடங்கி முன்னேறுவதற்காக, தமிழக அரசு…
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர்…
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தங்ககுமார் என்பவருக்கும், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வி என்பவருக்கும்…