Categories: சினிமா

நள்ளிரவில் வந்த மின்னஞ்சல்.. ஒரே ராத்திரியில் எடுக்கப்பட்ட முடிவு..? எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு காரணம் இதானா..!

Spread the love

எதிர்நீச்சல் சீரியல் இன்றுடன் முடிவடையுள்ள நிலையில் இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை போன்றே சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களையும் மகிழ்ச்சியாக தினம் தோறும் கண்டுகளித்து வருகிறார்கள்.

அதிலும் டிஆர்பி- யில் எப்போதும் முதலிடத்தில் இருந்த சீரியல் எதிர்நீச்சல் மாரிமுத்து மறைவுக்குப் பிறகு அந்த சீரியலின் வரவேற்பு சற்று குறைய தொடங்கியது. குணசேகரன் கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்து வந்தார், இருப்பினும் மாரிமுத்துவின் இடத்தை நிரப்ப முடியவில்லை, கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி ஒளிபரப்பான சீரியல் தான் எதிர்நீச்சல்.

இந்த சீரியலில் சத்திய பிரியா, மாரிமுத்து, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, கனிகா, மதுமிதா, விபுராமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். பெண்களின் அடிமைத்தனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியல் பெண்களிடையே மட்டும் இல்லாமல் ஆண்கள் இடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்போது பெரிய அளவிற்கு வரவேற்பு இல்லாமல் இருந்து வருகின்றது.

சீரியலில் கதைக்களம் இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் வேக வேகமாக இந்த சீரியலை முடிப்பதற்கு முடிவு செய்து இருக்கின்றன. இந்த சீரியலை கோலங்கள், மெட்டிஒலி போன்ற வெற்றிகரமான சீரியல்களை இயக்கிய திருச்செல்வம் இயக்கியிருந்தார். சீரியலின் இயக்குனரான திருச்செல்வத்தை பொறுத்தவரையில் தான் விரும்பியவாறு கதையை கொண்டு செல்ல வேண்டும் என்று என்பவர்.

ஆனால் சேனலில் குறித்த சுதந்திரம் முதலில் இருந்ததாகவும் தற்போது கதையை மாற்ற கோரி சேனல் தரப்பில் இருந்து வற்புறுத்துவராக கூறப்படுகின்றது. மாரிமுத்து கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் என்றாலும் அனைவருக்கும் மிகச் சரியான கதாபாத்திரத்தையே திருச்செல்வம் கொடுத்திருக்கின்றார்.

சேனல் தரப்பில் இருந்து கதையை மாற்று கோரி கூறுவதால் இயக்குனர் சம்மதம் தெரிவிக்கவில்லை. கடைசியில் ஒரே ஒரு மின்னஞ்சல் சேனல் தரப்பிலிருந்து திருச்செல்வத்திற்கு செல்ல அன்று இரவே சீரியலை முடிப்பதற்கு முடிவு செய்து இருக்கின்றார். அதன்படி இன்றுடன் சீரியல் முடிய உள்ளது என அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கின்றது.

Mahalakshmi

Recent Posts

பெற்றோர்கள் மகிழ்ச்சி… அரசு மருத்துவமனையில்.. குழந்தை பிறந்தால் 1 கிராம் தங்கம்… தவெக அரசின் ‘தாய்மாமன்’ திட்டம்… யாருக்கெல்லாம் கிடைக்கும்…? முழு விவரம் உள்ளே…!

தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.…

7 minutes ago

உங்க உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்… ஆதாரம் இருந்தா நிரூபிங்க… தவெகவிற்கு சேகர் பாபு சவால்..!!

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்…

10 minutes ago

மீண்டும் வருகிறது 1997 பேரழிவு..? “தலைகீழாக மாறப்போகும் உலக வானிலை” பசிபிக் பெருங்கடலில் நாசா கண்டறிந்த ஆபத்து..!!

பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் 'Sentinel-6' செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது. இது 'சூப்பர்…

14 minutes ago

“சேலத்தில் பரபரப்பு… தூய்மைப் பணியாளர் காலில் விழுந்த தமிழக அமைச்சர்…! மேடையில் உறைந்து போன தொண்டர்கள் – பின்னணி என்ன…?”

தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் வடக்கு…

17 minutes ago

“நடைபாதையில் தூங்கிய பிஞ்சு உயிர்.. கொடூரமாக சீரழித்து வீசி சென்ற டாக்சி டிரைவர்”… 100 சிசிடிவி கேமராக்கள்.. 4 மணி நேர வேட்டை… டெல்லியை உலுக்கிய கொடூர சம்பவம்..!

டெல்லியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும்…

28 minutes ago

உதயநிதிக்கு முதல்வர் விஜய் கொடுத்த ஸ்பேஸ் முடிந்தது… பொறுமையா இருந்தது இதுக்குதான்…. அம்பலப்படுத்திய நடிகர் ஷாம்…!

தமிழக சட்டசபையில் கடந்த சில வாரங்களாக "முதலமைச்சர் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்?", "அவருக்குப் பேசத் தெரியவில்லையா?" என்று எழுந்த…

39 minutes ago