Connect with us

CINEMA

‘இனிமேல் நான் நடிக்க மாட்டேன்.. ஊரைவிட்டே ஓடிருறேன் அண்ணே’… காதல் சுகுமாரின் வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வு…

இயக்குனர் சங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘காதல்’. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பலரையும் கண் கலங்க வைத்தது. அது மட்டும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை குவித்த படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தில் காமெடி நடிகர் சுகமாரின் நடிப்பு நல்ல வரவேற்பு பெற்றது.

   

மதுரையை சேர்ந்த சுகுமார் காதல் படத்தை தவிர வேறு சில படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார் .ஆனால் காமெடி நடிகராக தான் நினைத்த இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் ஒரு சில படங்களை இயக்குனராக இயக்கியும் உள்ளார். இவர் சும்மாவே ஆடுவோம், திருட்டு விசிடி போன்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் தனது திரை அனுபவங்களை பற்றியும் இணையத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது,’சினிமாவில் ஒரு பக்கம் வடிவேலு டீம் , மற்றொரு பக்கம் விவேக் டீம் . இந்த பக்கமும் போக முடியாது. அந்த பக்கமும் போக முடியாது. அவங்க ரெண்டு பேரும் என்னை வாழ விடவே இல்லை. ‘ என்று அதிர்ச்சியான பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

தற்பொழுது இவர் பிரபல சேனல் ஒன்றுக்கு தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான தருணங்களை பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘நடிகர் வடிவேலுவை பார்க்க தான் சென்றிருந்த போது, தன்னை போல நடிப்பதாக கூறி வடிவேலு தன்னை மிரட்டியதாகவும், அடித்ததாகவும் ‘இனிமேல் நான் நடிக்க மாட்டேன். ஊரைவிட்டே ஓடிருறேன் அண்ணே’ என்று கூறி அங்கிருந்து தப்பித்து வந்ததாகவும் ‘அவர் அளித்துள்ள இந்த பேட்டியானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top