எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் மூலம் தமிழில் அறிமுகமான கேரள நடிகை அசின். முன்னணி ஹீரோக்கள் கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா போன்றவர்களுடன் நடித்த இவர், தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார். புகழின் உச்சத்தில் இவர் திடீரென மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார். சுமார் 10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துள்ள மிகப்பெரிய தொழிலதிபரை அசின், கணவராக அடைந்ததே ஒரு சுவாரசியமான கதைதான்.
தமிழை தொடர்ந்து இந்தியில் நடித்த அசினுக்கு, நடிகர் அக்ஷய்குமார் மூலம் ஒரு பங்க்ஷனில்தான் ராகுல் சர்மா அறிமுகமானார். அவர் யாரென்றே தெரியாமல் அவருடன் கொஞ்சநேரம் அசின் ஜாலியாக பேசி இருக்கிறார். பிறகு அக்ஷய்குமாரிடம் கேட்ட போது, அவர்தான் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ என கூறியிருக்கிறார். அதன்பின்பு தான் அசினுக்கு, ராகுல் சர்மா மீது அதிக காதல் ஏற்பட்டு இருக்கிறது. கஜினி படத்தில் ஏர்வாய்ஸ் என்ற பெரிய மொபைல் போன் நிறுவனத்தின் முதலாளி என தெரியாமல் சூர்யாவை, அசின் காதலிப்பது போலவே அவரது நிஜவாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.
ராகுல் சர்மா, பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்ளாதவர். மீடியாக்களிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாதவர் என்ற நிலையில், அசின் அவரை யார் என்ற கேட்ட விஷயம், அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி, இருவருக்கும் நட்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிறகு நட்பு காதலாகி, திருமணமாகி இப்போது கணவர், பிள்ளையுடன் அசின் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பொறுப்புகளையும் அசின்தான் இப்போது கவனித்துக் கொள்கிறார். சாதாரண நடிகையாக துவங்கிய வாழ்க்கை, இன்று 1300 கோடி சொத்துகளுக்கு அதிபதியாக மைக்ரோமேக்ஸ் நிறுவன உரிமையாளராக அசினை மாற்றி இருக்கிறது.
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…